புதன், 10 ஏப்ரல், 2019

#94 - தசமபாகத்தை பற்றி தெளிவான விளக்கம் தேவை

#94 - *தசமபாகத்தை பற்றி தெளிவான விளக்கம் அளிக்கவும்*.
ஊழியருக்கு தசமபாகம் கொடுத்தால் பாவமன்னிப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்களே?

*பதில்*:
வருமானத்தில் 10 சதவீதம் கடவுளுக்கு கொடுக்க வேண்டும் என்பது தசமபாகம்.

மோசே மூலமாக தேவன் கட்டளையாகவே இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். நமக்கல்ல.

லேவி. 27:30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

லேவி. 27:32 கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

தசமபாகம் என்பது - தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் கொடுக்கப்பட்டது.

*நியாயபிரமாணத்தின்படி*  
இஸ்ரவேலர்கள் “லேவியருக்கு” கொடுக்கவேண்டும்”. (எபி. 7:5)

தசமபாகம் வாங்குபவர்கள் – லேவியராக இருக்கவேண்டும் !!

நாம் அனைவரும் புறஜாதியினர் – நியாயபிரமானம் ஒருபோதும் நமக்கு கொடுக்கப்படவில்லை.

நியாயபிரமாணம் சிலுவையில் முடிந்து விட்டது. ரோ. 10:4
புதிய பிரமாணத்தை நம் எல்லாருக்கும் கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.

புதிய கட்டளையின் படி மாத்திரமே நாம் நடக்க வேண்டும்.

*புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்படவேண்டிய காணிக்கை முறை*:
-    திட்டம் பண்ணி / சேர்த்து வைத்து கொடுக்க வேண்டும் 1கொரி. 16:1-2

-    தன் மனதில் நினைத்து வைத்தபடி கொடுக்க வேண்டும் 2கொரி. 9:7

-    மற்றவர் சொன்ன அளவின்படி கொடுக்க கூடாது 2கொரி. 9:7

-    வருத்தப்பட்டு காணிக்கை கொடுக்க கூடாது 2கொரி. 9:7, 1பேதுரு 4:9

-    இருப்பதில் இருந்து கொடுக்க வேண்டும், கடன் வாங்கி கொடுப்பதல்ல 2கொரி. 8:12

-    பலவீனரை தாங்கும்படி கொடுக்கவேண்டும் அப். 20:35

-    வஞ்சனையில்லாமல் கொடுக்கவேண்டும் ரோ. 12:8

-    பரிசுத்தவான்களின் குறைவுகளை நிவிர்த்தி செய்யும் படி உதவவேண்டும் ரோ. 12:13

-    எல்லோருக்கும் தெரியும்படி உதவிசெய்யகூடாது மத். 6:3

-    பரிபூரண சந்தோஷத்தோடு கொடுக்கவேண்டும் 2கொரி. 8:2

-    உற்சாகமாய் கொடுக்கவேண்டும் 2கொரி. 9:7

...இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்..

1- யோவான் ஸ்நானன் – 50சதவீதம் கொடுக்க சொன்னார் லூக். 3:11

2- இயேசு 100சதவீதம் கொடுத்தவளை பாராட்டினார் – மாற்கு 12:43

10சதவீதம் கொடுக்கவேண்டும் என்பது பழைய கட்டளை. சரியாய் சொல்லவேண்டுமென்றால் – இஸ்ரவேலர்கள் ஆண்டிற்கு ஏறத்தாழ 33சதவீதம் கொடுத்தார்கள் !!

* தசமபாகம் என்கிற பெயரில் ஊழியர்கள் சபையாரிடம் கேட்கக்கூடாது – அது வேதாகம சட்டவிரோதம்.

* ஆனால் - ஊழியரையும், ஊழியத்தையும் தாராளமாக தாங்கவேண்டியது – சபையாரின் கடமை.

* உதாரத்துவமாய், உற்சாகமாய், சபையாரை கொடுங்கள் என்று சொல்கிற ஊழியக்காரனும் தன் சம்பாத்தியத்திலிருந்து நிறைவாய் சபை வளர்ச்சிக்காய் கொடுக்க வேண்டும். முன்மாதிரியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பாவ மன்னிப்பை கொடுக்கும் அதிகாரம் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே உள்ளது. லூக்கா 5:24

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக