#94 - *தசமபாகத்தை
பற்றி தெளிவான விளக்கம் அளிக்கவும்*.
ஊழியருக்கு
தசமபாகம் கொடுத்தால் பாவமன்னிப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்களே?
*பதில்*:
வருமானத்தில் 10
சதவீதம் கடவுளுக்கு கொடுக்க வேண்டும் என்பது தசமபாகம்.
மோசே மூலமாக
தேவன் கட்டளையாகவே இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். நமக்கல்ல.
லேவி. 27:30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின்
கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
லேவி. 27:32 கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு
பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
தசமபாகம் என்பது
- தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும்
கொடுக்கப்பட்டது.
*நியாயபிரமாணத்தின்படி*
இஸ்ரவேலர்கள்
“லேவியருக்கு” கொடுக்கவேண்டும்”. (எபி. 7:5)
தசமபாகம்
வாங்குபவர்கள் – லேவியராக இருக்கவேண்டும் !!
நாம் அனைவரும் புறஜாதியினர்
– நியாயபிரமானம் ஒருபோதும் நமக்கு கொடுக்கப்படவில்லை.
நியாயபிரமாணம்
சிலுவையில் முடிந்து விட்டது. ரோ. 10:4
புதிய
பிரமாணத்தை நம் எல்லாருக்கும் கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.
புதிய
கட்டளையின் படி மாத்திரமே நாம் நடக்க வேண்டும்.
*புதிய
ஏற்பாட்டில் கொடுக்கப்படவேண்டிய காணிக்கை முறை*:
- திட்டம் பண்ணி / சேர்த்து வைத்து கொடுக்க
வேண்டும் 1கொரி. 16:1-2
- தன் மனதில் நினைத்து வைத்தபடி கொடுக்க
வேண்டும் 2கொரி. 9:7
- மற்றவர் சொன்ன அளவின்படி கொடுக்க கூடாது
2கொரி. 9:7
- வருத்தப்பட்டு காணிக்கை கொடுக்க கூடாது
2கொரி. 9:7, 1பேதுரு 4:9
- இருப்பதில் இருந்து கொடுக்க வேண்டும், கடன் வாங்கி கொடுப்பதல்ல 2கொரி. 8:12
- பலவீனரை தாங்கும்படி கொடுக்கவேண்டும் அப்.
20:35
- வஞ்சனையில்லாமல் கொடுக்கவேண்டும் ரோ. 12:8
- பரிசுத்தவான்களின் குறைவுகளை நிவிர்த்தி
செய்யும் படி உதவவேண்டும் ரோ. 12:13
- எல்லோருக்கும் தெரியும்படி
உதவிசெய்யகூடாது மத். 6:3
- பரிபூரண சந்தோஷத்தோடு கொடுக்கவேண்டும்
2கொரி. 8:2
- உற்சாகமாய் கொடுக்கவேண்டும் 2கொரி. 9:7
...இன்னும் பல
சொல்லிக்கொண்டே போகலாம்..
1- யோவான் ஸ்நானன் – 50சதவீதம் கொடுக்க சொன்னார் – லூக்.
3:11
2- இயேசு 100சதவீதம் கொடுத்தவளை பாராட்டினார் – மாற்கு 12:43
10சதவீதம்
கொடுக்கவேண்டும் என்பது பழைய கட்டளை. சரியாய் சொல்லவேண்டுமென்றால் – இஸ்ரவேலர்கள்
ஆண்டிற்கு ஏறத்தாழ 33சதவீதம் கொடுத்தார்கள் !!
* தசமபாகம்
என்கிற பெயரில் ஊழியர்கள் சபையாரிடம் கேட்கக்கூடாது – அது வேதாகம சட்டவிரோதம்.
* ஆனால் - ஊழியரையும், ஊழியத்தையும் தாராளமாக தாங்கவேண்டியது –
சபையாரின் கடமை.
* உதாரத்துவமாய், உற்சாகமாய், சபையாரை கொடுங்கள்
என்று சொல்கிற ஊழியக்காரனும் தன் சம்பாத்தியத்திலிருந்து நிறைவாய் சபை
வளர்ச்சிக்காய் கொடுக்க வேண்டும். முன்மாதிரியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
பாவ மன்னிப்பை கொடுக்கும்
அதிகாரம் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே உள்ளது. லூக்கா 5:24
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக