ஞாயிறு, 23 நவம்பர், 2025

#1227 - பெந்தெகோஸ்தே சபையினரை போன்று கிறிஸ்துவின் சபையிலும், மூன்று அல்லது ஐந்து இடங்களில் ஒரு ஊழியர் வாரத்தின் முதல் நாளில் ஊழியம் செய்கிறார்களே. அது தவறு இல்லையா?

#1227 - *பெந்தெகோஸ்தே சபையினரை போன்று கிறிஸ்துவின் சபையிலும், மூன்று அல்லது ஐந்து இடங்களில் ஒரு ஊழியர் வாரத்தின் முதல் நாளில் ஊழியம் செய்கிறார்களே. அது தவறு இல்லையா?*
 
*பதில்* : கிறிஸ்துவினுடைய சபை தன்னாட்சியானது. எந்த பிராந்திய சபையும் மற்ற பிராந்திய சபைக்கு கீழானது அல்ல.
 
ஒவ்வொரு பிராந்திய சபையின் நிர்வாகமானது “ஊழியர்களின்” கையில் அல்ல மாறாக அது அந்த பிராந்திய சபையின் மூப்பர்களிடம் உள்ளது. அப். 14:23, தீத்து 1:5
 
அப்படிப்பட்ட மூப்பர்களின் அதிகாரம் அவர்கள் மேய்க்கும் அல்லது நிர்வகிக்கும் பிராந்திய சபைக்கு மட்டுமேயானது. அப். 20:28, 1 பேதுரு 5:2
 
ஒவ்வொரு பிராந்திய சபையும் தங்கள் செயல்களில் சுயமாக முடிவு செய்தது. 2 கொரி. 8:1–5, 8:19
 
எருசலேமிலுள்ள சபையானது மற்ற பிராந்திய சபைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அப். 11:27–30. ஒரு மத்திய தலைமையகமாய் எந்த சபையும் செயல்படவில்லை என்பதை அறிவது அவசியம்.
 
மேலும், சபையில் ஒற்றை தலைமைக்கு வேதத்தில் இடமில்லை !!
 
மூப்பர்கள், அல்லது கண்காணிகள் அல்லது பாஸ்டர்கள் என்று பன்மையிலேயே வேதாகமத்தில் காண்கிறோம். அப்படிப்பட்டவர்கள்:
1- வயதானவராக இருக்க வேண்டும்
2- ஆணாக இருக்க வேண்டும்
3- திருமணமானவராக இருக்க வேண்டும்
4- சொந்த பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும் – அவர்கள் தேவனுக்குள் இருக்க வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் – மூப்பராகவோ பாஸ்டராகவோ கண்காணியாகவோ இருக்க வேதம் அனுமதிக்கவில்லை.
5- புதிய கிறிஸ்தவராகவும் இருக்கக்கூடாது

தீத்து 1:5-9

மேலும் அப்படிப்பட்டவர்கள் கீழ்கண்டவற்றில் தேறியிருக்க வேண்டும்:
- சபையை மேய்க்கும் அனுபவம் (அப். 20:28)
- போதிக்க அறிந்திருக்க வேண்டும் (1தீமோ. 3:2)
- முன் உதாரணமாக இருக்கவேண்டும் (எபி. 13:7)
- ஆத்துமாக்களை கவனிக்க வேண்டும் (எபி. 13:17)
- தவறான போதனையை கண்டிக்க தெரிந்திருக்க வேண்டும் (தீத்து 1:9)

*இப்படிப்பட்ட மூப்பர்/கண்காணி/பாஸ்டர் பொறுப்பில் – பெண்களுக்கு இடமில்லை*.

அனைவரும் சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும். மத். 23:8

பாஸ்டர், பிஷப், கண்காணி என்பதெல்லாம் வேலையின் பெயர். 
 
பாஸ்டர் என்பதும் பிஷப் என்பதும் கண்காணி என்பதுமான பதங்கள் அனைத்தும் ஒரே பதத்தையே குறிக்கிறது. பிஷப் ஒரு நபர் பாஸ்டர் இன்னொரு நபர் என்பதல்ல! 

அப்போஸ்தலர் 20:17, 28-ல், பவுல் எபேசு சபையின் மூப்பர்களை (பிரஸ்புடெரோஸ்) குறித்துப் பேசுகிறார், அவர்களை மந்தையை மேய்க்க வேண்டிய கண்காணிகள் (எபிஸ்கோபோஸ்) என்று குறிப்பிடுகிறார் (பொய்மைனோ).


தீத்து 1:5–7, பவுல் ஒவ்வொரு ஊரிலும் மூப்பர்களை நியமிக்க தீத்துவுக்கு அறிவுறுத்துவதைக் காட்டுகிறது, பின்னர் இந்தப் பணிக்கான தகுதிகளை விவரிக்கும் போது உடனடியாக கண்காணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.


1 பேதுரு 5:1–2-ல், பேதுரு மூப்பர்களிடம் முறையிட்டு, கண்காணிகளாகச் செயல்படும் அதே வேளையில் தேவனுடைய மந்தையை மேய்க்கச் சொல்கிறார்.


இப்படிப்பட்ட எந்தப் பொறுப்புகளையும் பட்டங்களாய் வைத்துக்கொள்ளக் கூடாது!! சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும்.

 
மருத்துவரை கவுரவமாக டாக்டர் என்று அழைத்து பழகிவிட்ட சமுதாயம்
குப்பை சுத்தம் செய்பவர் அல்லது முடி திருத்துபவர் என்று தங்கள் தொழிலை வைத்து அழைப்பதில்லையே !!
 
சபை நிர்வாகம் என்பது வசனத்தின்படி  ஊழியர்கள் கையில் அல்ல, மூப்பர்கள் கையில் உள்ளது!! எபி. 13:7, 17, 24, 1 தீமோ. 5:17, 1தெச. 5:12.
 
மூப்பர்கள் அனைவரும் சபை ஊழியர்களாக இருக்க முடியும். ஆனால், எல்லா ஊழியர்களும் மூப்பர்களாக இருக்கமுடியாது.
 
புதிய இடத்தில் ஒரு தொழுகையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஊழியர் நினைத்து அங்கே ஆத்துமாக்களை சேர்த்தால், கட்டாயம் விரைவில் அந்த இடத்திற்கு தனி ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும். அப்படி செய்யாமல், தானே அத்தனை பிராந்தியங்களையும் கையில் வைத்திருந்தால், அது தவறான செயல்.
 
தங்களின் இச்செயலிற்கு, 
பயணத்தினிமித்தம் பிலிப்புவையும் பவுலையும் கோடிட்டுக் காண்பிக்கலாம். 
 
சுவிசேஷகரான பிலிப்பு தனது ஆரம்ப நாட்களில் பயணம் செய்தார். ஆனால் அவர் செசரியாவை அடைந்தபோது அதை நிறுத்திவிட்டார் (அப். 8:40). சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு சுவிசேஷகரின் கடமைகளை முன்னெடுத்து வந்தார் (அப். 21:8) என்பதை அறியலாம்.
 
அப்போஸ்தலன் பவுலும் தொடர்ந்து வாரந்தோறும் பயணத்தில் காலத்தை செலவளிக்கவில்லை. அவர் கொரிந்துவில் 18 மாதங்கள் கழித்தார் (அப். 18:11). 
 
பின்னர் எபேசுவில், 3 ஆண்டுகள் (அப். 20:31). 
 
அப்போஸ்தலர் நிருபத்தை நாம் படிக்கும்பொழுது, ஒரு பகுதியில் தான் திறம்பட ஊழியம் செய்ததை உணரும் வரை பணியாற்றினார் என்பது தெளிவாகிறது. 
 
பல முறை அவர் ஒரு வேலையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதற்கு முன்பு அவர் நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதும் கூட, அவர்களின் முன்னேற்றத்தைச் சரிபார்க்கவும், ஊக்கமளிக்கவும் செய்தார்.
 
ஒரு பகுதியில் போதுமான எண்ணிக்கையிலான பிரசங்கியாளர்கள் இல்லாததால் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம் என்றாலும், அது சிறந்ததல்ல. அது வேத அடிப்படையிலானதும் அல்ல. 
 
ஒரு சபையாரை போலவே, ஒரு பிரசங்கியாளரும் ஒரு உள்ளூர் சபையின் உறுப்பினராக இருக்க வேண்டும். 
 
பவுல் எருசலேமில் இருந்தபோது, அங்குள்ள சகோதரர்களுடன் சேர முயன்றார் (அப். 9:26). 
 
தன்னாட்சி பெறுவதற்குப் பதிலாக, பல பிராந்திய சபைகள் ஒரு பிரசங்கியாளரின் மேற்பார்வையின் கீழ் செயல்படத் தொடங்கும் பொழுது தேவன் அங்கீகரிக்காத சபைகளின் இணைப்பை உருவாக்குகின்றன.
 
பிரசங்கியாளர் உள்ளூர் சபையின் செயல்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளார். 
 
ஜனங்களை கர்த்தரிடம் கொண்டு வருவதற்கு மட்டுமல்லாமல், இரட்சிக்கப்பட்டவர்களை பலப்படுத்தவும் ஒரு பிரசங்கியாளர் உழைக்கிறார் (எபே. 4:11-13). 
 
தனக்கு படியளக்கும் வெளிநாட்டுக்காரனுக்கு கணக்கு காண்பிப்பதற்காகவோ, அல்லது வீட்டை விட்டு வெளியே வராத சோம்பேறிகள் வீட்டிற்கு இவர்களே ஒரு சிறிய கூட்டத்தை அவ்வீட்டிற்கு கூட்டிப் போய் ஒரு மினி ஆராதனையை நடத்தி தங்கள் பையை நிரப்பி சுய பக்தியை காண்பிக்கும் கள்ள அவலத்தை விட்டு உண்மையான ஊழியனாய் கர்த்தருக்குள் திரும்பவேண்டும்.
 
கிறிஸ்துவின் சபையார் என்று தங்களை அழைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு பிராந்திய சபைக்கும் தனிப்பட்ட நிர்வாகம் இருக்கவேண்டியது கட்டாயம். 
 
ஒரே ஊழியர் காலையில் ஒரிடத்திலும், பின்னர் இன்னொரு இடத்திலுமாக ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நிரந்தரமாய் நடத்துவது வேதத்திற்கு முரணான செயல். அது வேதத்தின்படி தவறு. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

ஞாயிறு, 16 நவம்பர், 2025

#1226 - கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா?

#1226 - *கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா?*

*பதில்* : வழக்கமாய் இந்தக் கேள்வி தொழுகை முடிந்து என்னிடம் கேட்கப்பட்டதால் இதை நமது பட்டியலில் ஒரு பதிவாய் எழுத சமயம் இல்லாமற்போனது.

சுருக்கமாய் பதிலை சொல்லவேண்டுமானால் – “ஆம், கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்புவை சேர்க்கலாம்.

ஏனெனில், உப்பு உடன்படிக்கையை பிரதிநிதிப்படுத்துகிறது. எண். 18:19, 2நாளா. 13:5
எபிரேயத்திலும் ஆங்கிலத்திலும் தெளிவாய் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் தமிழில் காணவில்லை என்பது வருத்தம்.

எண். 18:19…… கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.

ஆங்கிலம்: …… it is a “*covenant of salt*” for ever before Jehovah unto thee and to thy seed with thee.

கர்த்தருடைய பந்தியின் அப்பத்தை எப்படி செய்யவேண்டும் என்ற செய்முறையை வேதம் நமக்கு குறிப்பிட்டு வழங்கவில்லை.

பஸ்காவின் வேளையில் அன்று வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தையே இயேசு கிறிஸ்து பயன்படுத்தினார். மத். 26:19-20

பஸ்காவின் நாட்களில் கர்த்தருடைய பந்தியை கிறிஸ்து துவக்கியதால் (மத். 26:26) அந்த பஸ்காவில் தயார் செய்யப்பட்ட அப்பத்தின் செய்முறையை காணமுடியும்.

யாத். 12:8 “அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்”.

அப்பமானது புளிப்பில்லாததாய் இருக்கவேண்டும் என்பது அவசியம்.

பாவமில்லாத வாழ்க்கைக்கு புளிப்பில்லாததை பவுல் ஒப்பிடுகிறார். 1கொரி. 5:6-7 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

பாவமில்லாத கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கும் அப்பம், புளிப்பில்லாத அப்பத்தால் பொருத்தமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

புளிப்பில்லாத அப்பத்தை செய்ய பலவிதமான செய்முறைகள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டிருந்தும், புளிப்பும் தேன் மாத்திரமே விலக்கப்பட்டது என அறிகிறோம். லேவி. 2:11

எப்படியாயினும் அந்த அப்பத்தில் உப்பு கட்டாயம் சேர்க்கவேண்டும் என கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. லேவி. 2:13

முடிவாக,
கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா வேண்டாமா என எந்த நேரடி கட்டளையும் இல்லை. புளிபில்லாமல் இருப்பது அவசியம். ஆகவே கடையில் விற்கும் Bread பயன்படுத்த முடியாது.

அப்பத்தில் உப்பை உபயோகிப்பது தவறு என்று எவரும் சொல்வதற்கில்லை!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.comx
Print Friendly and PDF

திங்கள், 3 நவம்பர், 2025

#1225 - கடவுளுக்கும் மனுஷிக்கும் பிறந்த பிள்ளையா இயேசுகிறிஸ்து? இது தவறான கேள்வினா என்னை மன்னிச்சுடுங்க. பிறப்புக்குமுன்.... பிறப்பிக்கு பின் இயேசு கிறிஸ்துவை குறித்துக் கொஞ்சம் சொல்லுஙக

 #1225 - *கடவுளுக்கும் மனுஷிக்கும் பிறந்த பிள்ளையா இயேசுகிறிஸ்து? இது தவறான கேள்வினா என்னை மன்னிச்சுடுங்க.  பிறப்புக்குமுன்.... பிறப்பிக்கு பின் இயேசு கிறிஸ்துவை குறித்துக் கொஞ்சம் சொல்லுஙக*
 
*பதில்* :  ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதால் விந்துக்கள் இணைந்து கரு உருவாகியே மனிதர்களாகிய நாம் அனைவரும் பிறக்கிறோம் அல்லது நவீன விஞ்ஞான முறையில், ஆணின் விந்தை தனியே எடுத்து அதை பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கரு உருவாகிற முறையிலும் குழந்தை உருவாகுகிறது. எப்படியாயினும் குழந்தை உருவாக ஒரு ஆணிண் விந்து அவசியம்.
 
இந்துக்களின் புராணங்களில் (கதைகளில்) வருவது போல கடவுள் மனுஷியுடன் உறவு கொள்வதில்லை.
 
இயேசு கிறிஸ்துவோ - 
ஆணின் துணையினாலோ அல்லது 
ஆணிண் விந்துவின் மூலமாகவோ பிறக்கவில்லை. 
 
ஏசா. 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு “கன்னிகை கர்ப்பவதியாகி” ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
 
கலா. 4:5 காலம் நிறைவேறினபோது, “ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்” (மூல பாஷையில் – ஸ்திரீயின் வழியில் பிறந்தவர்  / made of women) நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
 
யோ. 1:13 - 14 அவர்கள், “இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல்”, தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
 
ஒரு மனிதன் எவ்வாறு பிறக்கிறானோ அதே வகையில்
பெண்ணின் வயிற்றில் கர்ப்பப்பையின் வழியே குழந்தையாக தேவன் மாம்ச வடிவில் பிறந்தார். 
 
1யோ. 4:2  தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
 
1யோ. 4:3  “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
 
2யோ. 1:7  “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
 
ரோ. 1:5  “மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்”, பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட “தேவகுமாரனுமாயிருக்கிறார்”.
 
1தீமோ. 3:16  அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்”, ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
 
இப்படியாக இன்னும் ஏராளமான வசனங்களை எடுத்துக்காண்பிக்கலாம். இதுவே போதுமானது என்று நம்புகிறேன்.
 
பெண்ணின் வித்து (Seed / zera in Hebrew) என்று ஆதியாகமம் 3:15ல் வாக்களிக்கப்பட்டது. 
 
ஏனெனில் – 
பாவத்தில் விழுந்த ஆதாமின் மூலமாக 
வந்த எந்த மனிதனும் பாவத்தினுள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டதால், 
உலகத்தின் பாவத்தை தீர்க்க பாவமில்லாதவராக இயேசு வந்தார்.
 
எபி. 4:15  நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
 
*இந்நாட்களில் அநேகர் தங்களை கிறிஸ்துவின் சபையார் என்று மார்தட்டிக்கொண்டு, கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று ஏற்காமல், அவர் தேவன் அல்ல என்று வாதிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதிகள்*
. வீட்டினுள்ளேயே நுழையவிடக்கூடாதென யோவான் அப்போஸ்தலன் சொல்லியிருப்பதன் அவசியத்தை நாம் உணரவேண்டும். 2யோ. 1:10-11 
 
மாம்சத்தில் வந்த இயேசுவைக் *கர்த்தர் என்றும் கிறிஸ்து என்றும் ஏற்காதவனே அந்திக்கிறிஸ்து* என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 
 
1யோ. 2:22  இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
 
1யோ. 4:3  மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
 
2யோ. 1:7  மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
 
2)
*இயேசு கிறிஸ்து - இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்பும் இருக்கிறவர்*
சிலுவைக்கு பின்பும் இருக்கிறவர். வெளி. 1:8, 11, 21:6, 22:13 
 
எப்போதும் அவர் வார்த்தையானவர். யோ. 1:1, 14, 1யோ. 1:1-2, 5:7, வெளி. 19:13
 
எப்போதும் அவர் தேவன்.  யோ. 10:30-33, 20:28; சங். 45:6; ஏசா. 7:14, 9:6, 40:9-11; மத். 1:23; ரோ.  9:5; பிலி. 2:6; 1தீமோ. 3:16; தீத்து 2:13; எபி. 1:8-13; 2பேதுரு 1:1, 1யோ. 5:7, 5:20
 
மனித குலத்திற்குள் பாவ மன்னிப்பின் வழியாய் ஒரு மீட்பராய் வந்ததன் நிமித்தம் அவர் தேவகுமாரன் என்றழைக்கப்படுகிறார். ரோ. 1:5
 
இந்த உலகத்திற்குள் மாம்சத்திலே வந்து சிலுவையில் மரணத்தை வெற்றிச்சிறந்ததால் – அவருக்கு: 
ஆண்டவர் – அப். 2:36
கர்த்தர் – பிலி. 2:11
மேசியா (கிரேக்க வார்த்தை) / இரட்சகர் / மீட்பர் (தமிழ் வார்த்தை) / கிறிஸ்து (எபிரேய வார்த்தை) – அப். 2:36, 4:11-12, 5:30-31, 10:36-42; சங். 2:1-8; மத். 28:18-20; யோ. 3:35-36, யோ. 5:22-29; ரோ. 14:8-12; 2கொரி. 5:10; 2தெச. 1:7-10
பிரதான ஆசாரியன் – எபி. 9:11-15
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் – எபி. 9:15
மூத்த சகோதரன் - ரோ. 8:29
அப்போஸ்தலன் -  எபி. 3:1
என்ற பெயர்களும் கொடுக்கப்பட்டது. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

புதன், 29 அக்டோபர், 2025

#1224 - நூற்றுக்கு அதிபதி இயேசுவை நேரடியாக பார்த்தார் என மத்தேயு 8:5லும், லூக்கா.7:3ல் மூப்பரை அனுப்பினார் என்றும் உள்ளதே… இதை எப்படி புரிந்துக்கொள்வது?

 #1224 - *நூற்றுக்கு அதிபதி இயேசுவை நேரடியாக பார்த்தார் என மத்தேயு 8:5லும், லூக்கா.7:3ல் மூப்பரை அனுப்பினார் என்றும் உள்ளதே… இதை எப்படி புரிந்துக்கொள்வது?*
 
*பதில்* : இது ஒரு முரண்பாடு போல தோன்றலாம். ஆனால், சம்பவத்தின் பார்வை மற்றும் பாணியில் உள்ள வேறுபாட்டை கவனிக்கவும்:
 
மத்தேயு மற்றும் லூக்கா இருவரும் ஒரே சம்பவத்தை விவரித்தாலும், அவர்கள் கவனம் வேறுபடுகிறது:
 
மத்தேயு சொல்லும்போது சுருக்கமாகவும் நேரடியாகவும் எழுதுகிறார். இது இயேசுவின் அதிகாரம் மற்றும் நேரடி தொடர்பு என்பதைக் காட்டும்.
 
லூக்கா சமூக விவரங்களில் அதிக கவனம் செலுத்தி, விபரமாய் எழுதுகிறேன் என்று தனது கடிதத்தை  துவங்கினாரே ! (லூக்கா 1:3-4)
 
ஆகவே, இருவருக்கு இடைப்பட்டதான மனிதர்கள் (யூத மூப்பர்கள்), பின்னர் நூற்றுக்கு அதிபதியின் நண்பர்கள் ஆகியோரை குறிப்பிடுகிறார். இதன் மூலம் கலாச்சார மற்றும் உறவுப் பின்புலத்தை வெளிப்படுத்துகிறார்.
 
அதாவது:
மத்தேயு அந்த நிகழ்வை நூற்றுக்கு அதிபதி நேரடியாக செய்தது போல சுருக்கமாக எழுதுகிறார், ஆனால் லூக்கா அவர் யூதர்களின் மூப்பர்கள் வழியே செயல்பட்டதை விளக்குகிறார்.
 
இவ்வாறு எழுதப்படுவது ஒரு பழமையான வழக்கமான சொற்தொடர். 
 
உதாரணங்கள்:
யோவான் 4:1-3அங்கே இயேசு ஞானஸ்நானம் கொடுத்தார் என கூறினாலும், அதனைத் தொடர்ந்து அவர் தாமே அல்ல, அவருடைய சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்ததாய் விளக்குகிறது.
 
யாத்திராகமம் புத்தகத்தில் - மோசே, பார்வோனோடு ஆரோன் மூலம் பேசுகிறார்; ஆனாலும் வேதாகமம் “மோசே பேசினார்” என்று கூறுகிறது.
 
ஆகவே, மத்தேயுவின் விவரம் லூக்காவை மறுப்பதல்ல. 
 
ஒவ்வொரு நற்செய்தியாசிரியரும் தங்களின் முக்கிய செய்திக்கேற்ப எழுத்து வகையை அமைத்துள்ளனர்.
 
மத்தேயு – புறஜாதியானான நூற்றுக்கு அதிபதியின் நம்பிக்கை மீது கவனம் செலுத்துகிறார். அதாவது யூதரல்லாதவரும் இயேசுவின் அதிகாரத்தை ஏற்கிறார்கள் என்பதை காட்டுகிறார். இதை தனிப்பட்ட சந்திப்பு போல சுருக்கமாக எழுதுகிறார்.
 
லூக்கா - அந்த நூற்றுக்கு அதிபதியின் தாழ்மை மற்றும் தகுதியற்ற தன்மை பற்றி கவனம் செலுத்துகிறார். அவர், தான், இயேசுவை நேரில் சந்திக்கத் தகுதியற்றவனாக எண்ணியதையும் (லூக்கா 7:6) அதனிமித்தம் யூதர்களின் மூப்பர்களின் மூலம் நடந்ததாகவும் விவரிக்கிறார். 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF