கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
கணியாகுளம் கிறிஸ்துவின் சபை
#421 - *அக்கினி போட்டு எரிக்க வந்தேன் என்கிறார் இயேசு? இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் சொல்லுகிற அக்கினி என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? இது யாரை குறிக்கும்?*
*பதில்* : இங்கே, அக்கினி என்பது கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சையை குறிக்கிறது. (மத். 10:34)
பாவத்தினால் உண்டாகும் அழிவின் தாக்கத்திலிருந்தும் உலகமுழுவதும் தங்கள் ஆதிக்கத்தை பரப்பும் முயற்சியிலிருக்கும் ரோமானியர்களினின்று உலகமானது விடுவிக்கப்படுவதையும் குறிப்பிடும் வண்ணம் இந்த இடத்திலும் மத்தேயுவிலும் இந்த வார்த்தைகள் குறிப்பிடப்படுகிறது.
இந்த இரண்டு புலன்களிலும் இந்த அக்கினி ஏற்கனவே எரிந்து கொண்டிருந்தது. இருப்பினும், அது ஒரு தீப்பொறியாக இருந்தது. ஆனால் விரைவில் அனைத்தையும் நுகரும் சுடராக வெடிக்கும் என்று விளக்குகிறார்.
#1227 - *ஒன்றுக்கு மேற்பட்ட சபையை ஒரு ஊழியர் ஞாயிறு காலை முதல் இரவு வரை ஊழியம் செய்கிறார்களே. அது தவறா சரியா?*
*பதில்* : கிறிஸ்துவினுடைய சபை தன்னாட்சியானது. எந்த பிராந்திய சபையும் மற்ற பிராந்திய சபைக்கு கீழானது அல்ல.
ஒவ்வொரு பிராந்திய சபையின் நிர்வாகமானது “ஊழியர்களின்” கையில் அல்ல மாறாக அது அந்த பிராந்திய சபையின் மூப்பர்களிடம் உள்ளது. அப். 14:23, தீத்து 1:5
அப்படிப்பட்ட மூப்பர்களின் அதிகாரம் அவர்கள் மேய்க்கும் அல்லது நிர்வகிக்கும் பிராந்திய சபைக்கு மட்டுமேயானது. அப். 20:28, 1 பேதுரு 5:2
ஒவ்வொரு பிராந்திய சபையும் தங்கள் செயல்களில் சுயமாக முடிவு செய்தது. 2 கொரி. 8:1–5, 8:19
எருசலேமிலுள்ள சபையானது மற்ற பிராந்திய சபைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அப். 11:27–30. ஒரு மத்திய தலைமையகமாய் எந்த சபையும் செயல்படவில்லை என்பதை அறிவது அவசியம்.
மேலும், சபையில் ஒற்றை தலைமைக்கு வேதத்தில் இடமில்லை !!
மூப்பர்கள், அல்லது கண்காணிகள் அல்லது பாஸ்டர்கள் என்று பன்மையிலேயே வேதாகமத்தில் காண்கிறோம். அப்படிப்பட்டவர்கள்:
1- வயதானவராக இருக்க வேண்டும்
2- ஆணாக இருக்க வேண்டும்
3- திருமணமானவராக இருக்க வேண்டும்
4- சொந்த பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும் – அவர்கள் தேவனுக்குள் இருக்க வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் – மூப்பராகவோ பாஸ்டராகவோ கண்காணியாகவோ இருக்க வேதம் அனுமதிக்கவில்லை.
5- புதிய கிறிஸ்தவராகவும் இருக்கக்கூடாது
தீத்து 1:5-9
மேலும் அப்படிப்பட்டவர்கள் கீழ்கண்டவற்றில் தேறியிருக்க வேண்டும்:
- சபையை மேய்க்கும் அனுபவம் (அப். 20:28)
- போதிக்க அறிந்திருக்க வேண்டும் (1தீமோ. 3:2)
- முன் உதாரணமாக இருக்கவேண்டும் (எபி. 13:7)
- ஆத்துமாக்களை கவனிக்க வேண்டும் (எபி. 13:17)
- தவறான போதனையை கண்டிக்க தெரிந்திருக்க வேண்டும் (தீத்து 1:9)
*இப்படிப்பட்ட மூப்பர்/கண்காணி/பாஸ்டர் பொறுப்பில் – பெண்களுக்கு இடமில்லை*.
அனைவரும் சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும். மத். 23:8
அப்போஸ்தலர் 20:17, 28-ல், பவுல் எபேசு சபையின் மூப்பர்களை (பிரஸ்புடெரோஸ்) குறித்துப் பேசுகிறார், அவர்களை மந்தையை மேய்க்க வேண்டிய கண்காணிகள் (எபிஸ்கோபோஸ்) என்று குறிப்பிடுகிறார் (பொய்மைனோ).
தீத்து 1:5–7, பவுல் ஒவ்வொரு ஊரிலும் மூப்பர்களை நியமிக்க தீத்துவுக்கு அறிவுறுத்துவதைக் காட்டுகிறது, பின்னர் இந்தப் பணிக்கான தகுதிகளை விவரிக்கும் போது உடனடியாக கண்காணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
1 பேதுரு 5:1–2-ல், பேதுரு மூப்பர்களிடம் முறையிட்டு, கண்காணிகளாகச் செயல்படும் அதே வேளையில் தேவனுடைய மந்தையை மேய்க்கச் சொல்கிறார்.
இப்படிப்பட்ட எந்தப் பொறுப்புகளையும் பட்டங்களாய் வைத்துக்கொள்ளக் கூடாது!! சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும்.