#1226 - *கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா?*
*பதில்* : வழக்கமாய் இந்தக் கேள்வி தொழுகை முடிந்து என்னிடம் கேட்கப்பட்டதால் இதை நமது பட்டியலில் ஒரு பதிவாய் எழுத சமயம் இல்லாமற்போனது.
சுருக்கமாய் பதிலை சொல்லவேண்டுமானால் – “ஆம், கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்புவை சேர்க்கலாம்.
ஏனெனில், உப்பு உடன்படிக்கையை பிரதிநிதிப்படுத்துகிறது. எண். 18:19, 2நாளா. 13:5
எபிரேயத்திலும் ஆங்கிலத்திலும் தெளிவாய் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் தமிழில் காணவில்லை என்பது வருத்தம்.
எண். 18:19…… கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
ஆங்கிலம்: …… it is a “*covenant of salt*” for ever before Jehovah unto thee and to thy seed with thee.
கர்த்தருடைய பந்தியின் அப்பத்தை எப்படி செய்யவேண்டும் என்ற செய்முறையை வேதம் நமக்கு குறிப்பிட்டு வழங்கவில்லை.
பஸ்காவின் வேளையில் அன்று வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தையே இயேசு கிறிஸ்து பயன்படுத்தினார். மத். 26:19-20
பஸ்காவின் நாட்களில் கர்த்தருடைய பந்தியை கிறிஸ்து துவக்கியதால் (மத். 26:26) அந்த பஸ்காவில் தயார் செய்யப்பட்ட அப்பத்தின் செய்முறையை காணமுடியும்.
யாத். 12:8 “அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்”.
அப்பமானது புளிப்பில்லாததாய் இருக்கவேண்டும் என்பது அவசியம்.
பாவமில்லாத வாழ்க்கைக்கு புளிப்பில்லாததை பவுல் ஒப்பிடுகிறார். 1கொரி. 5:6-7 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
பாவமில்லாத கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கும் அப்பம், புளிப்பில்லாத அப்பத்தால் பொருத்தமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
புளிப்பில்லாத அப்பத்தை செய்ய பலவிதமான செய்முறைகள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டிருந்தும், புளிப்பும் தேன் மாத்திரமே விலக்கப்பட்டது என அறிகிறோம். லேவி. 2:11
எப்படியாயினும் அந்த அப்பத்தில் உப்பு கட்டாயம் சேர்க்கவேண்டும் என கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. லேவி. 2:13
முடிவாக,
கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா வேண்டாமா என எந்த நேரடி கட்டளையும் இல்லை. புளிபில்லாமல் இருப்பது அவசியம். ஆகவே கடையில் விற்கும் Bread பயன்படுத்த முடியாது.
அப்பத்தில் உப்பை உபயோகிப்பது தவறு என்று எவரும் சொல்வதற்கில்லை!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.comx
*பதில்* : வழக்கமாய் இந்தக் கேள்வி தொழுகை முடிந்து என்னிடம் கேட்கப்பட்டதால் இதை நமது பட்டியலில் ஒரு பதிவாய் எழுத சமயம் இல்லாமற்போனது.
சுருக்கமாய் பதிலை சொல்லவேண்டுமானால் – “ஆம், கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்புவை சேர்க்கலாம்.
ஏனெனில், உப்பு உடன்படிக்கையை பிரதிநிதிப்படுத்துகிறது. எண். 18:19, 2நாளா. 13:5
எபிரேயத்திலும் ஆங்கிலத்திலும் தெளிவாய் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் தமிழில் காணவில்லை என்பது வருத்தம்.
எண். 18:19…… கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
ஆங்கிலம்: …… it is a “*covenant of salt*” for ever before Jehovah unto thee and to thy seed with thee.
கர்த்தருடைய பந்தியின் அப்பத்தை எப்படி செய்யவேண்டும் என்ற செய்முறையை வேதம் நமக்கு குறிப்பிட்டு வழங்கவில்லை.
பஸ்காவின் வேளையில் அன்று வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தையே இயேசு கிறிஸ்து பயன்படுத்தினார். மத். 26:19-20
பஸ்காவின் நாட்களில் கர்த்தருடைய பந்தியை கிறிஸ்து துவக்கியதால் (மத். 26:26) அந்த பஸ்காவில் தயார் செய்யப்பட்ட அப்பத்தின் செய்முறையை காணமுடியும்.
யாத். 12:8 “அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்”.
அப்பமானது புளிப்பில்லாததாய் இருக்கவேண்டும் என்பது அவசியம்.
பாவமில்லாத வாழ்க்கைக்கு புளிப்பில்லாததை பவுல் ஒப்பிடுகிறார். 1கொரி. 5:6-7 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
பாவமில்லாத கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கும் அப்பம், புளிப்பில்லாத அப்பத்தால் பொருத்தமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
புளிப்பில்லாத அப்பத்தை செய்ய பலவிதமான செய்முறைகள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டிருந்தும், புளிப்பும் தேன் மாத்திரமே விலக்கப்பட்டது என அறிகிறோம். லேவி. 2:11
எப்படியாயினும் அந்த அப்பத்தில் உப்பு கட்டாயம் சேர்க்கவேண்டும் என கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. லேவி. 2:13
முடிவாக,
கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா வேண்டாமா என எந்த நேரடி கட்டளையும் இல்லை. புளிபில்லாமல் இருப்பது அவசியம். ஆகவே கடையில் விற்கும் Bread பயன்படுத்த முடியாது.
அப்பத்தில் உப்பை உபயோகிப்பது தவறு என்று எவரும் சொல்வதற்கில்லை!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.comx
