வியாழன், 22 ஜனவரி, 2026

#1228 – தாவீதின் தாகத்தினிமித்தம் மூன்று பராக்கிரமசாலிகள் பெலிஸ்தரின் பாளையத்தினுள் சென்று பெத்லெகேமன் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலிருந்து கொண்டு வந்த தண்ணீரை ஏன் கர்த்தருக்கென்று தரையிலே ஊற்றினார்?

#1228 – *தாவீதின் தாகத்தினிமித்தம் மூன்று பராக்கிரமசாலிகள் பெலிஸ்தரின் பாளையத்தினுள் சென்று பெத்லெகேமன் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலிருந்து கொண்டு வந்த தண்ணீரை ஏன் கர்த்தருக்கென்று தரையிலே ஊற்றினார்?* 

அது எப்படி அந்த மனிதரின் இரத்தத்தைக் குடிக்கும் செயலாகும்? 

2 சாமுவேல் 23:15-17 “தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்து போய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள். ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்”. இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.  - இந்த பகுதியை விளக்கவும்.

*பதில் *: தாவீதின் ஊர் என்று அன்பாய் அழைக்கப்பட்ட பெத்லெகேமின் ஒலிமுகவாசலிலுள்ள கிணற்றின் தண்ணீரை குடிக்க ஆசைக் கொண்ட (1நாளா. 11:17) தங்களது ராஜாவின் விருப்பத்தை நிறைவேற்ற, போர் நடந்துக்கொண்டிருக்கும் அந்த சூழலிலும் (1நாளா. 11:14-16) அவனுடன் இருந்த மூன்று பராக்கிரமசாலிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் எதிரிகளின் பாளயத்தினுள் சென்று அந்த கிணற்றின் தண்ணீரை மொண்டு கொண்டு வந்தனர். 

ஒரு வேளை, அவர்கள் அங்கே எதிரிகளால் கொல்லப்பட்டிருந்தால், எதிரிகளின் பாளையத்தினுள் உள்ள கிணற்றுத் தண்ணீருக்காய் ஆசைப்பட்டதே அவர்களது உயிர் பறிபோனதன் காரணமாகிவிட்டிருக்கும்.

ஆகவே, அந்தத் தண்ணீர் 'இரத்தத்திற்கு' சமமாக தாவீது கருதினார்.  (1நாளா. 11:19, ரோ. 16:4, நியா. 5:18)

பெலிஸ்தியரின் பாளயத்தைத் தாண்டி, தன் உயிரைப் பணயம் வைத்து அந்த மூன்று வீரர்கள் பெத்லெகேம் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டு வந்த அந்த தண்ணீரை, வெறும் தண்ணீராகப் பார்க்கவில்லை; தன் வீரர்களின் தியாகத்தில் அதை அவர்களது உயிரான இரத்தமாய் பார்த்தார். ஏனெனில், மாம்சத்தின் இரத்தத்தில் உயிர் இருக்கிறது என்று லேவி. 17:11ல் காண்கிறோம்.

தாவீது அந்தத் தண்ணீரை வீணாகத் தரையில் ஊற்றவில்லை மாறாக கர்த்தருக்கென்று ஊற்றினான் என்பது, அதை ஒரு பலி போல தேவனுக்கு முன்பாக ஊற்றினார் என்பதாகும்.  (2 சாமுவேல் 23:16, 1நாளா. 11:18)

மிகத் தெளிவாய் வேதாகமம் இரத்தத்தை நாம் புசிக்கக்கூடாதென விளக்கியிருக்கிறது.

உபா. 12:16 - “இரத்தத்தை மாத்திரம் புசிக்க வேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்”. 

அப். 15:29 - “அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்”. 

வேதாகமக் காலத்தில், திராட்சரசத்தையோ அல்லது விலையுயர்ந்த பொருளையோ கர்த்தருக்குப் படைக்கும்போது அதைத் தரையில் பானபலியாக ஊற்றினார்கள். (ஆதியாகமம் 35:14, யாத்திராகமம் 29:40-41, எண்ணாகமம் 15:5, 7, 10, பிலிப்பியர் 2:17). ஊற்றப்பட்ட பொருளை மீண்டும் எடுக்க முடியாதபடி முழுமையாகக் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது. தரையில் ஊற்றப்பட்டால் அதை மீண்டும் சேகரிக்க முடியாதே. 

ஆகவே, தாவீது அந்தத் தண்ணீரை தரையில் ஊற்றியது, "இது இனி எனக்குச் சொந்தமல்ல, இது தனது பராக்கிரமசாலிகளின் இரத்தம், அது கர்த்தருக்கே உரியது" என முழுமையாக ஒப்படைப்பதைக் குறிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.blogspot.com
Print Friendly and PDF

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

#421 - அக்கினி போட்டு எரிக்க வந்தேன் என்கிறார் இயேசு? இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் சொல்லுகிற அக்கினி என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? இது யாரை குறிக்கும்?

#421 - *அக்கினி போட்டு எரிக்க வந்தேன் என்கிறார் இயேசு? இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் சொல்லுகிற அக்கினி என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? இது யாரை குறிக்கும்?*

 

*பதில்* : இங்கே, அக்கினி என்பது கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சையை குறிக்கிறது. (மத். 10:34)

 

பாவத்தினால் உண்டாகும் அழிவின் தாக்கத்திலிருந்தும் உலகமுழுவதும் தங்கள் ஆதிக்கத்தை பரப்பும் முயற்சியிலிருக்கும் ரோமானியர்களினின்று உலகமானது விடுவிக்கப்படுவதையும் குறிப்பிடும் வண்ணம் இந்த இடத்திலும் மத்தேயுவிலும் இந்த வார்த்தைகள் குறிப்பிடப்படுகிறது.

 

இந்த இரண்டு புலன்களிலும் இந்த அக்கினி ஏற்கனவே எரிந்து கொண்டிருந்தது. இருப்பினும், அது ஒரு தீப்பொறியாக இருந்தது. ஆனால் விரைவில் அனைத்தையும் நுகரும் சுடராக வெடிக்கும் என்று விளக்குகிறார்.


*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

ஞாயிறு, 23 நவம்பர், 2025

#1227 - ஒன்றுக்கு மேற்பட்ட சபையை ஒரு ஊழியர் ஞாயிறு காலை முதல் இரவு வரை ஊழியம் செய்கிறார்களே. அது தவறா சரியா?

#1227 - *ஒன்றுக்கு மேற்பட்ட சபையை ஒரு ஊழியர் ஞாயிறு காலை முதல் இரவு வரை ஊழியம் செய்கிறார்களே. அது தவறா சரியா?*
 
*பதில்* : கிறிஸ்துவினுடைய சபை தன்னாட்சியானது. எந்த பிராந்திய சபையும் மற்ற பிராந்திய சபைக்கு கீழானது அல்ல.
 
ஒவ்வொரு பிராந்திய சபையின் நிர்வாகமானது “ஊழியர்களின்” கையில் அல்ல மாறாக அது அந்த பிராந்திய சபையின் மூப்பர்களிடம் உள்ளது. அப். 14:23, தீத்து 1:5
 
அப்படிப்பட்ட மூப்பர்களின் அதிகாரம் அவர்கள் மேய்க்கும் அல்லது நிர்வகிக்கும் பிராந்திய சபைக்கு மட்டுமேயானது. அப். 20:28, 1 பேதுரு 5:2
 
ஒவ்வொரு பிராந்திய சபையும் தங்கள் செயல்களில் சுயமாக முடிவு செய்தது. 2 கொரி. 8:1–5, 8:19
 
எருசலேமிலுள்ள சபையானது மற்ற பிராந்திய சபைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அப். 11:27–30. ஒரு மத்திய தலைமையகமாய் எந்த சபையும் செயல்படவில்லை என்பதை அறிவது அவசியம்.
 
மேலும், சபையில் ஒற்றை தலைமைக்கு வேதத்தில் இடமில்லை !!
 
மூப்பர்கள், அல்லது கண்காணிகள் அல்லது பாஸ்டர்கள் என்று பன்மையிலேயே வேதாகமத்தில் காண்கிறோம். அப்படிப்பட்டவர்கள்:
1- வயதானவராக இருக்க வேண்டும்
2- ஆணாக இருக்க வேண்டும்
3- திருமணமானவராக இருக்க வேண்டும்
4- சொந்த பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும் – அவர்கள் தேவனுக்குள் இருக்க வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் – மூப்பராகவோ பாஸ்டராகவோ கண்காணியாகவோ இருக்க வேதம் அனுமதிக்கவில்லை.
5- புதிய கிறிஸ்தவராகவும் இருக்கக்கூடாது

தீத்து 1:5-9

மேலும் அப்படிப்பட்டவர்கள் கீழ்கண்டவற்றில் தேறியிருக்க வேண்டும்:
- சபையை மேய்க்கும் அனுபவம் (அப். 20:28)
- போதிக்க அறிந்திருக்க வேண்டும் (1தீமோ. 3:2)
- முன் உதாரணமாக இருக்கவேண்டும் (எபி. 13:7)
- ஆத்துமாக்களை கவனிக்க வேண்டும் (எபி. 13:17)
- தவறான போதனையை கண்டிக்க தெரிந்திருக்க வேண்டும் (தீத்து 1:9)

*இப்படிப்பட்ட மூப்பர்/கண்காணி/பாஸ்டர் பொறுப்பில் – பெண்களுக்கு இடமில்லை*.

அனைவரும் சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும். மத். 23:8

பாஸ்டர், பிஷப், கண்காணி என்பதெல்லாம் வேலையின் பெயர். 
 
பாஸ்டர் என்பதும் பிஷப் என்பதும் கண்காணி என்பதுமான பதங்கள் அனைத்தும் ஒரே பதத்தையே குறிக்கிறது. பிஷப் ஒரு நபர் பாஸ்டர் இன்னொரு நபர் என்பதல்ல! 

அப்போஸ்தலர் 20:17, 28-ல், பவுல் எபேசு சபையின் மூப்பர்களை (பிரஸ்புடெரோஸ்) குறித்துப் பேசுகிறார், அவர்களை மந்தையை மேய்க்க வேண்டிய கண்காணிகள் (எபிஸ்கோபோஸ்) என்று குறிப்பிடுகிறார் (பொய்மைனோ).


தீத்து 1:5–7, பவுல் ஒவ்வொரு ஊரிலும் மூப்பர்களை நியமிக்க தீத்துவுக்கு அறிவுறுத்துவதைக் காட்டுகிறது, பின்னர் இந்தப் பணிக்கான தகுதிகளை விவரிக்கும் போது உடனடியாக கண்காணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.


1 பேதுரு 5:1–2-ல், பேதுரு மூப்பர்களிடம் முறையிட்டு, கண்காணிகளாகச் செயல்படும் அதே வேளையில் தேவனுடைய மந்தையை மேய்க்கச் சொல்கிறார்.


இப்படிப்பட்ட எந்தப் பொறுப்புகளையும் பட்டங்களாய் வைத்துக்கொள்ளக் கூடாது!! சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும்.

 
மருத்துவரை கவுரவமாக டாக்டர் என்று அழைத்து பழகிவிட்ட சமுதாயம்
குப்பை சுத்தம் செய்பவர் அல்லது முடி திருத்துபவர் என்று தங்கள் தொழிலை வைத்து அழைப்பதில்லையே !!
 
சபை நிர்வாகம் என்பது வசனத்தின்படி  ஊழியர்கள் கையில் அல்ல, மூப்பர்கள் கையில் உள்ளது!! எபி. 13:7, 17, 24, 1 தீமோ. 5:17, 1தெச. 5:12.
 
மூப்பர்கள் அனைவரும் சபை ஊழியர்களாக இருக்க முடியும். ஆனால், எல்லா ஊழியர்களும் மூப்பர்களாக இருக்கமுடியாது.
 
புதிய இடத்தில் ஒரு தொழுகையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஊழியர் நினைத்து அங்கே ஆத்துமாக்களை சேர்த்தால், கட்டாயம் விரைவில் அந்த இடத்திற்கு தனி ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும். அப்படி செய்யாமல், தானே அத்தனை பிராந்தியங்களையும் கையில் வைத்திருந்தால், அது தவறான செயல்.
 
தங்களின் இச்செயலிற்கு, 
பயணத்தினிமித்தம் பிலிப்புவையும் பவுலையும் கோடிட்டுக் காண்பிக்கலாம். 
 
சுவிசேஷகரான பிலிப்பு தனது ஆரம்ப நாட்களில் பயணம் செய்தார். ஆனால் அவர் செசரியாவை அடைந்தபோது அதை நிறுத்திவிட்டார் (அப். 8:40). சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு சுவிசேஷகரின் கடமைகளை முன்னெடுத்து வந்தார் (அப். 21:8) என்பதை அறியலாம்.
 
அப்போஸ்தலன் பவுலும் தொடர்ந்து வாரந்தோறும் பயணத்தில் காலத்தை செலவளிக்கவில்லை. அவர் கொரிந்துவில் 18 மாதங்கள் கழித்தார் (அப். 18:11). 
 
பின்னர் எபேசுவில், 3 ஆண்டுகள் (அப். 20:31). 
 
அப்போஸ்தலர் நிருபத்தை நாம் படிக்கும்பொழுது, ஒரு பகுதியில் தான் திறம்பட ஊழியம் செய்ததை உணரும் வரை பணியாற்றினார் என்பது தெளிவாகிறது. 
 
பல முறை அவர் ஒரு வேலையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதற்கு முன்பு அவர் நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதும் கூட, அவர்களின் முன்னேற்றத்தைச் சரிபார்க்கவும், ஊக்கமளிக்கவும் செய்தார்.
 
ஒரு பகுதியில் போதுமான எண்ணிக்கையிலான பிரசங்கியாளர்கள் இல்லாததால் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம் என்றாலும், அது சிறந்ததல்ல. அது வேத அடிப்படையிலானதும் அல்ல. 
 
ஒரு சபையாரை போலவே, ஒரு பிரசங்கியாளரும் ஒரு உள்ளூர் சபையின் உறுப்பினராக இருக்க வேண்டும். 
 
பவுல் எருசலேமில் இருந்தபோது, அங்குள்ள சகோதரர்களுடன் சேர முயன்றார் (அப். 9:26). 
 
தன்னாட்சி பெறுவதற்குப் பதிலாக, பல பிராந்திய சபைகள் ஒரு பிரசங்கியாளரின் மேற்பார்வையின் கீழ் செயல்படத் தொடங்கும் பொழுது தேவன் அங்கீகரிக்காத சபைகளின் இணைப்பை உருவாக்குகின்றன.
 
பிரசங்கியாளர் உள்ளூர் சபையின் செயல்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளார். 
 
ஜனங்களை கர்த்தரிடம் கொண்டு வருவதற்கு மட்டுமல்லாமல், இரட்சிக்கப்பட்டவர்களை பலப்படுத்தவும் ஒரு பிரசங்கியாளர் உழைக்கிறார் (எபே. 4:11-13). 
 
தனக்கு படியளக்கும் வெளிநாட்டுக்காரனுக்கு கணக்கு காண்பிப்பதற்காகவோ, அல்லது வீட்டை விட்டு வெளியே வராத சோம்பேறிகள் வீட்டிற்கு இவர்களே ஒரு சிறிய கூட்டத்தை அவ்வீட்டிற்கு கூட்டிப் போய் ஒரு மினி ஆராதனையை நடத்தி தங்கள் பையை நிரப்பி சுய பக்தியை காண்பிக்கும் கள்ள அவலத்தை விட்டு உண்மையான ஊழியனாய் கர்த்தருக்குள் திரும்பவேண்டும்.
 
கிறிஸ்துவின் சபையார் என்று தங்களை அழைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு பிராந்திய சபைக்கும் தனிப்பட்ட நிர்வாகம் இருக்கவேண்டியது கட்டாயம். 
 
ஒரே ஊழியர் காலையில் ஒரிடத்திலும், பின்னர் இன்னொரு இடத்திலுமாக ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நிரந்தரமாய் நடத்துவது வேதத்திற்கு முரணான செயல். அது வேதத்தின்படி தவறு. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

ஞாயிறு, 16 நவம்பர், 2025

#1226 - கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா?

#1226 - *கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா?*

*பதில்* : வழக்கமாய் இந்தக் கேள்வி தொழுகை முடிந்து என்னிடம் கேட்கப்பட்டதால் இதை நமது பட்டியலில் ஒரு பதிவாய் எழுத சமயம் இல்லாமற்போனது.

சுருக்கமாய் பதிலை சொல்லவேண்டுமானால் – “ஆம், கர்த்தருடைய பந்தியின் அப்பத்தில் உப்புவை சேர்க்கலாம்.

ஏனெனில், உப்பு உடன்படிக்கையை பிரதிநிதிப்படுத்துகிறது. எண். 18:19, 2நாளா. 13:5
எபிரேயத்திலும் ஆங்கிலத்திலும் தெளிவாய் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் தமிழில் காணவில்லை என்பது வருத்தம்.

எண். 18:19…… கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.

ஆங்கிலம்: …… it is a “*covenant of salt*” for ever before Jehovah unto thee and to thy seed with thee.

கர்த்தருடைய பந்தியின் அப்பத்தை எப்படி செய்யவேண்டும் என்ற செய்முறையை வேதம் நமக்கு குறிப்பிட்டு வழங்கவில்லை.

பஸ்காவின் வேளையில் அன்று வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தையே இயேசு கிறிஸ்து பயன்படுத்தினார். மத். 26:19-20

பஸ்காவின் நாட்களில் கர்த்தருடைய பந்தியை கிறிஸ்து துவக்கியதால் (மத். 26:26) அந்த பஸ்காவில் தயார் செய்யப்பட்ட அப்பத்தின் செய்முறையை காணமுடியும்.

யாத். 12:8 “அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்”.

அப்பமானது புளிப்பில்லாததாய் இருக்கவேண்டும் என்பது அவசியம்.

பாவமில்லாத வாழ்க்கைக்கு புளிப்பில்லாததை பவுல் ஒப்பிடுகிறார். 1கொரி. 5:6-7 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

பாவமில்லாத கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கும் அப்பம், புளிப்பில்லாத அப்பத்தால் பொருத்தமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

புளிப்பில்லாத அப்பத்தை செய்ய பலவிதமான செய்முறைகள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டிருந்தும், புளிப்பும் தேன் மாத்திரமே விலக்கப்பட்டது என அறிகிறோம். லேவி. 2:11

எப்படியாயினும் அந்த அப்பத்தில் உப்பு கட்டாயம் சேர்க்கவேண்டும் என கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. லேவி. 2:13

முடிவாக,
கர்த்தருடைய பந்தியில் பயன்படுத்தப்படும் அப்பத்தில் உப்பு சேர்க்கலாமா வேண்டாமா என எந்த நேரடி கட்டளையும் இல்லை. புளிபில்லாமல் இருப்பது அவசியம். ஆகவே கடையில் விற்கும் Bread பயன்படுத்த முடியாது.

அப்பத்தில் உப்பை உபயோகிப்பது தவறு என்று எவரும் சொல்வதற்கில்லை!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.comx
Print Friendly and PDF