ஞாயிறு, 2 ஜூன், 2024

#1205 - இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று 2கொரிந்தியர் 4:4ல் வரும் வார்த்தை பிதாவாகிய தேவனைக் குறிப்பதாக பலர் இந்நாட்களில் பிரசங்கம் செய்கிறார்களே?

#1205 - *இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று 2கொரிந்தியர் 4:4ல் வரும் வார்த்தை பிதாவாகிய தேவனைக் குறிப்பதாக பலர் இந்நாட்களில் பிரசங்கம் செய்கிறார்களே? அது சரியா* என்று விளக்கவும்.

*பதில்*
: வசனம் 2கொரிந்திய 4:4 “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” என்ற இந்த வசனத்தில் வரும் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்ற வார்த்தை எந்த முரண்பாடுமின்றி சந்தேகத்திற்கிடமில்லாமல் சாத்தானையே குறிப்பதாகும்.

யோ. 12:31ல் பிசாசானவன், இவ்வுலகத்தின் அதிபதி என்றும்;
எபே. 2:2ல் ஆகாயத்து அதிகாரப் பிரபு என்றும்;
எபே. 6:12ல் இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதி, வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தேவன்" என்ற பெயர் சாத்தானுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது. அவனுடைய அதிகாரங்களினால் அல்ல, இந்த உலக மக்களின் சிந்தையில் அவன் அவ்வாறாக கருதப்படுவதாலேயே.

"இப்பிரபஞ்சம்" என்பது பொல்லாத உலகம் என்று பொருள்படும்; அல்லது மக்கள் கூட்டம். அவன் உலகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறான். அவர்கள் அவனுடைய விருப்பத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள்; அவர்கள் அவனுடைய திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்; அவர்கள் அவனுடைய நோக்கங்களை மேம்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிகிறவர்களாய் இருக்கிறார்கள். அவன் இவ்வுலகத்தின் ஏராளமான மக்களை தன்வசப்படுத்தி அவர்களது இதயத்தில் தான் ஒரு கடவுளைப் போல உட்கார்ந்திருக்கிறான்.

1கொரி. 10:20ன் வசனத்தைக் கவனிக்கவும். "அவர்கள் தேவனுக்கு அல்ல, பேய்களுக்கு  பலியிட்டார்கள்." சாத்தான் இந்த உலகத்தின் கடவுள் என்ற அறிவிப்பின் அர்த்தம் இங்கே:

(1) உலகத்தில் ஏராளமான மக்களை அவனது கட்டுப்பாட்டிலும் அவனது வழிகாட்டுதலிலும் வைத்து அவனுடைய மனிதர்கள், உண்மையான தேவன் மீதான விசுவாச துரோகத்தைப் கவனமாய் பாதுகாக்கிறான்.

(2) விக்கிரக வழிபாட்டு உலகம் குறிப்பாக அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அங்கு அவன் வணங்கப்படுகிறான்; பேலியாட்களின் மத சடங்குகள் மற்றும் சடங்காச்சாரங்களில் அவன் போற்றப்படுகிறான்.

(3) அவன் சகல துன்மார்க்கரின் இதயங்களிலும் வாழ்க்கையிலும் ஆட்சி செய்கிறான். அவனை பின்பற்றுபவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனுக்கு விரோதமான செய்கைகளிலும், சத்தியத்தை விட்டு சுய இஷ்டமான ஆராதனைகளிலும், வேதத்திற்கு புறம்பான சகலவிதமான கேளிக்கைகளிலும், கிறிஸ்தவன், விசுவாசி, என்ற பெயரில் சுயலாபத்தையும் சுய கவுரவத்தையும் தேடி, உலகத்தை படைத்த ஆவியான தேவனுக்கு ஒப்பாக விக்கிரகங்களை உருவாக்கி, பரிசுத்தம் என்ற பெயரில் சகலவித அருவருப்புகளையும் அரங்கேற்றி உலக மக்களுக்கு ஈடாக அனைத்துவிதமான காரியங்களையும் மானக்கேடான செயல்களைச் செய்வதில் அவனுடைய விருப்பத்திற்கு அடிபணிகிறார்கள்.

இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று சொல்லப்படும் வார்த்தை அப்பட்டமாக – சாத்தானையே குறிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

வியாழன், 9 மே, 2024

#1204 - இரண்டு மனைவிகள் உடையவர் கிறிஸ்தவரானால் இரண்டாவது மனைவியை என்ன செய்வது?

#1204- *இரண்டு மனைவிகள் உடையவர் கிறிஸ்தவரானால் இரண்டாவது மனைவியை என்ன செய்வது?*

இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகள் உடையவர், இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் சபையில் அங்கமாக உள்ளார்.  இரண்டு மனைவியுடன் உள்ள இவர் யாருடன் குடும்பம் நடத்த வேண்டும்? ஒருத்தியை ஏற்றுக் கொண்டு ஒருத்தியை கைவிட்டால் பாவமா?

*பதில்* : ஒருவரின் திருமணம் மற்றும் அவரது எதிர்கால உறவுகள் குறித்து, தான் கிறிஸ்தவராக எப்படியிருக்கமுடியும் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

கிறிஸ்துவின் சட்டத்திற்கு அடிபணிய விரும்பாதவர்கள் “முறையாக” ஞானஸ்நானம் பெறுவதில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால், அவ்வுறவை ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்னரே கிறிஸ்துவின் வார்த்தையின்படி தனது மனந்திரும்புதலின் போதே நடவடிக்கை எடுத்திருப்பார். (1யோ. 1:9, 2கொரி. 7:10)

வேதாகமத்தின்படி ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியைக் கொண்டிருப்பது கிறிஸ்துவின் சட்டத்தின் கீழ் விபச்சாரம். (மத்தேயு 19:4-6)

விபசாரத்தில் “இருப்பவர்” வேதாகமத்தின்படி கிறிஸ்தவனாக மாற முடியாது. ரோமர் 6:1-2, 1கொரி. 6:9-10

மனந்திரும்பாமல், ஞானஸ்நானம் எடுத்துவிட்டதாலேயே, ஏற்கனவே செய்த பாவங்கள் நீதி ஆகிவிடாது. மனந்திரும்புதலுக்கு பின்னரே ஞானஸ்நானமானது வருகிறது (அப். 2:38)!

ஒருவர் தேவனுடைய வார்த்தையை கேட்டு, அதை விசுவாசித்து, மனந்திரும்பி, அந்த விசுவாசத்தை அறிக்கையிட்டு எடுக்கும் ஞானஸ்நானமானது பாவ ஜீவியத்தின் சங்கிலிகளை உடைத்தெறிகிறது. ரோமர் 6:6-7.

ஆகவே, தம்பதியினரில் ஒருவர் உயிரோடிருக்கும் பட்சத்தில், ஒரு திருமணத்திற்கு மேற்பட்ட எந்த உறவும் விபச்சாரமாகும். இரண்டாவது திருமணம் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் அல்ல.

இவரது விபச்சாரத்தின் அடிப்படையில் இரண்டாவதாக இவருக்கு வாழ்க்கைப்பட்டவர் சட்டத்தை பயன்படுத்தவேண்டியுள்ளது (மத். 19:9). தேவனுடைய பார்வையில், அது அங்கீகரிக்கப்பட்ட திருமணம் அல்ல. மத். 19:4-6

அவரால் கருவுற்று பெற்றெடுத்த பிள்ளை மற்றும் அந்த பெண் தங்களது வாழ்வின் தனித்துவத்தை அடையும் வரை இவர் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

ஞாயிறு, 5 மே, 2024

மனதுருகும் தேவன்


 

*மனதுருகும் தேவன்*

by : Eddy Joel Silsbee

 

இரக்கமும் மனவுருக்கமும் நிறைந்த நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.

 

நாம் அவருடைய பிள்ளைகள். அவர் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை. உபா. 31:6

 

நம்முடைய தேவன் எப்போதும் நம்முடனே இருக்கிறவர். நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களாயிருக்கிறோம். சங். 95:7

 

நமக்கு ஏற்படும் எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நம்மை விடுவிக்கும்படிக்கு அவர் நம்மீது மனதுருகுபவர். சங். 86:15

 

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாய் எண்ணுவதில்லை. தமது முகத்தை அவர் நமக்கு மறைப்பதுமில்லை. அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது நம்மை விசாரிப்பவர் அவர். சங். 22:24

 

அவரது மனதுருக்கத்தை நாம் பெறவேண்டுமெனில் நாம் மனந்திரும்புவது அவசியம்.

 

தவறுகளைக் அடையளப்படுத்தி,

அதைக் களைந்து விட்டு

மனந்திரும்பி அவரை ஆராதித்த ஜனங்களின் மீது அவர் மனதுருகினார் என்கிறது வேதம். நியா. 10:16

 

தவறுகளிலிருந்து முதலாவது நாம் நம்மை விலக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஏசா. 55:7, 1யோ. 5:18, யாக். 4:8

 

சுய மனந்திரும்புதலின்றி தேவனை தேடி எந்த பிரயோஜனமும் இல்லை !! நேர விரயமே…

 

அவர் நம்மீது மனதுருகி நம்மை காக்க அவர் நமக்காய் காத்துக்கொண்டிருக்கிறார். 1சாமு. 30:18

 

சுயசோதனை முதலாவது வரட்டும். ஆசீர்வாதம் தானாக பின்தொடரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/xYI2i9pzsR8

 

வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

 

Print Friendly and PDF

Compassionate God

 *Compassionate God*

by : Eddy Joel Silsbee

 

Greetings in the name of our Lord Jesus Christ, who is full of mercy and compassion.

 

We are His children. He never abandons us. Deu. 31:6

 

Our God is always with us. We are the people of his pasture. Psa. 95:7

 

He is merciful to us to free us from all these fetters. Psa. 86:15

 

He does take the suffering of the afflicted lightly. He does not hide His face from us. He shows His mercy upon us when we call upon Him. Psa. 22:24

 

If we are to receive His mercy, we must repent.

 

Identify own mistakes,

Get rid of it,

Then the scriptures say that He had compassion on the people who repented and worshiped Him. Judges 10:16

 

We must first distance ourselves from mistakes. Then God blesses us. Isa. 55:7, 1 Jn. 5:18, Jas. 4:8

 

Seeking God without self-repentance is of no use!! That’s waste of time…

 

He has mercy on us and is waiting for us to protect us. 1 Sam. 30:18

 

Let introspection come first. Blessings will automatically follow.

 

*Eddy Joel Silsbee*

Preacher - Kaniyakulam Church of Christ,

Whatsapp : +918144776229 (India)

Email:  joelsilsbee@gmail.com

 

https://kaniyakulamcoc.wordpress.com/2024/05/05/compassionate-god/

 

Print Friendly and PDF