#1218 - *ஆதாம், ஏவாள் பாவம் மன்னிக்கப்பட்டதா?? அவர்களும் பரலோகத்திற்கு வருவார்களா??*
*பதில்* : ஆதாம் மற்றும் ஏவாளின் பாவம் மன்னிக்கப்பட்டதா இல்லையா என நேரடி ஆதார வசனம் வேதாகமத்தில் இல்லை.
பரலோகத்திற்குள் வருவார்களா என்பதை நாம் யூகிக்கவும் நமக்கு வேதம் இடம் கொடுக்கவில்லை. 1கொரி. 4:5
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமை பாவம். 1யோ. 3:4
அவரது வார்த்தைக்கு / கட்டளைக்கு அப்படியே கீழ்படியாமல் சுய இஷ்டத்தை செயல்படுத்தியதால் பாவம் விளைந்தது.
அவரது வார்த்தைக்கு / கட்டளைக்கு அப்படியே கீழ்படியாமல் சுய இஷ்டத்தை செயல்படுத்தியதால் பாவம் விளைந்தது.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கூடாது என்ற தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாததே ஆதாம் மற்றும் ஏவாளின் பாவம் (ஆதியாகமம் 2:17).
இந்தச் செயல் உலகில் பாவத்தையும் அதன் விளைவுகளையும் அறிமுகப்படுத்தியது.
அவர்களின் பாவம் தேவனிடமிருந்து பிரிந்து, ஆன்மீக மரணம் மற்றும் உடல் மரணம் மனித அனுபவத்தில் நுழைவதற்கு வழிவகுத்தது (ஆதியாகமம் 3:19; ரோமர் 5:12).
தேவனிடத்திலிருந்த நேரடி உறவு அவர்களை துண்டித்தது. ஏசா. 59:2
அவர்களை உடனடியாக அழிக்கவில்லை, மாறாக ஆடைக்காக விலங்குகளின் தோல்களை வழங்கினார், இது அவர்களின் பாவத்தின் விளைவிற்கான (நிர்வாணம்) மறைப்பைக் குறிக்கிறது (ஆதியாகமம் 3:21).
அதே வேளையில், மன்னிப்பு மற்றும் மீட்பிற்கான பாதையை தேவன் வழங்கினார்.
அது இயேசு கிறிஸ்துவின் மூலம் வந்தது, உடனடி மன்னிப்பு அல்ல.
அந்நேரத்தில் தானே, சாத்தானை தோற்கடிக்கும் இரட்சகரை (இயேசு கிறிஸ்து) முன்னறிவிக்கும் முதல் நற்செய்தி வாக்குறுதி தேவனிடத்திலிருந்து வந்தது. ஆதியாகமம் 3:15
இயேசுவின் மரணத்தினால் தான் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.
அப்படியானால் கிறிஸ்துவின் மரணத்திற்கு முன் உள்ளவர்கள் அவரால் இரட்சிக்கப்படவில்லை என்று அர்த்தமல்ல.
அந்த மக்களும் இரட்சிக்கப்படுவதற்கு இயேசுவின் மரணம் தேவைப்பட்டது.
மோசே நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவர்களையும், முற்பிதாக்களின் யுகத்தில் வாழ்ந்தவர்களையும் இயேசுவின் மரணம் இரட்சித்தது.
மோசே நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவர்களையும், முற்பிதாக்களின் யுகத்தில் வாழ்ந்தவர்களையும் இயேசுவின் மரணம் இரட்சித்தது.
"ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்". எபிரெயர் 9:15
பாவத்திற்கான விலையைச் செலுத்திய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் மன்னிப்பு மற்றும் தேவனுடனான ஒப்புரவு ஏற்படுவதை வேதம் கற்பிக்கிறது (ரோமர் 5:19; யோவான் 1:29)
வீழ்ச்சியின் சாபத்தை மாற்றியமைத்து, மீட்பை வழங்கும் "கடைசி ஆதாமாக" இயேசு கிறிஸ்து காணப்படுகிறார் (ரோமர் 5:8; 1 கொரிந்தியர் 15:45).
ஆகவே, முதலாம் ஆதாமானவன் மற்றும் ஏவாள் தேவனுடைய வாக்குறுதியை ஏற்று விசுவாசித்து, இரண்டாம் ஆதாமில் விசுவாசம் வைத்திருந்தால் அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டு பரலோகத்திற்குள் வரும் வாய்ப்பை பெறுவதற்கான வழியை வசனத்தின் மூலம் காண்கிறோம்.
தானே சொந்த கரங்களால் உருவாக்கியிருந்தும், தான் சொன்ன குறிப்பிட்ட பழத்தை சாப்பிடவேண்டாம் என்பதை மீறினவர்களை தேவன் விட்டுவைக்கவில்லை!
கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் இக்காலத்தில் அரங்கேறும் சகல கேலி கூத்துகளையும் வேத வசனத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.
கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் இக்காலத்தில் அரங்கேறும் சகல கேலி கூத்துகளையும் வேத வசனத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.
சபையில் குதிப்பது, கூச்சலிடுவது, மற்றவர்களுக்கு புரியாத வார்த்தைகளால் உளறி (அந்நியபாஷை) அதை தேவனோடு பேசுகிறேன் என்பது, மாதத்திற்கு ஒரு முறை கர்த்தருடைய பந்தி என்று தன்னை பரிசுத்தவானாய் காண்பித்துக்கொள்வது, ஆராதனை என்ற பெயரில் சபைக்குள்ளேயே மேள தாளங்களை பயன்படுத்துவது, முறையற்ற ஞானஸ்நானங்கள், தேவனுடைய பெயரில் மாதாந்திர காணிக்கை வசூல், அவர்களுக்கு இஷ்டமான சொந்த நிறுவனங்களை ஏற்படுத்தி அதை சபை என்று அழைத்துக்கொள்வது, பண்டிகைகள், சொல்லப்படாத வழிமுறைகள் என ஏராளமான கிறிஸ்தவத்தில் சொல்லப்படாத உட்புகுத்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வது அவசியம்.
ஆதாம் ஏவாள் வாழ்ந்து கடந்து போய்விட்டார்கள்.
அவர்கள் நமக்கு வைத்து சென்ற பாடங்களை வேதம் வெளிப்படுத்தியிருக்கிறது.
அவர்கள் நமக்கு வைத்து சென்ற பாடங்களை வேதம் வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆகவே,
எந்த செயலையும் தேவ வார்த்தையுடன் ஒப்பிட்டு பார்ப்பது கட்டாயம். இல்லையெனில் நியாயத்தீர்ப்பில் தேவனுக்கு முன்பதாக நான் உட்பட அனைவரும் வெட்கப்படவேண்டிவரும். 2தீமோ. 2:15
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும்* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எந்த செயலையும் தேவ வார்த்தையுடன் ஒப்பிட்டு பார்ப்பது கட்டாயம். இல்லையெனில் நியாயத்தீர்ப்பில் தேவனுக்கு முன்பதாக நான் உட்பட அனைவரும் வெட்கப்படவேண்டிவரும். 2தீமோ. 2:15
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும்* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*வலைதளம் :*
kaniyakulamcoc.wordpress.com
*YouTube “வேதம் அறிவோம்” :*
https://www.youtube.com/joelsilsbee
-------------------------
kaniyakulamcoc.wordpress.com
*YouTube “வேதம் அறிவோம்” :*
https://www.youtube.com/joelsilsbee
-------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக