வியாழன், 12 மே, 2022

தயக்கம் காண்பிக்காத ஆண்டவர்

*தயக்கம் காண்பிக்காத ஆண்டவர்*

by : Eddy Joel Silsbee

 

எப்போதும் மனமிறங்குகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கஷ்டத்தில் இருப்பவர்களை பார்த்ததும் கொஞ்சம் அவர்களோடு பழகுவதற்கு *தயக்கம்* காட்டுபவர்கள் உண்டு.

 

அவன் நம்மிடத்தில் வந்து கடன் அல்லது, உதவி வேண்டும் என்று கேட்டு விடுவனோ என்று தயக்கத்தில் பட்டும்படாமல் பேசுபவர்களை நம் வாழ்கையில் சந்தித்திருப்போம்..

 

எல்லாம் வல்ல நம் தேவனோ *உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளுகிறவர்* !! (சங். 22:24)

 

ஒருபோதும் முகம் சுளிக்காமல் அன்போடு அரவணைப்பவர் நம்மை படைத்த தேவன்..

 

நமது கஷ்டத்தையும், போராட்டத்தையும், வேதனையையும், நெருக்கத்தையும் அவர் அறிவார்.

 

அப்படிப்பட்ட அனைத்து சூழ்நிலையையும் அறிந்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எபி. 2:18

 

ஆகவே, பட்சபாதம் மற்றும் வேற்றுமையைக் காண்பிக்கும் நாசியில் சுவாசமுள்ள மனிதனை நம்புவதைப் பார்க்கிலும், எந்த சூழ்நிலையிலும் நம்மை ஆதரித்து அரவணைக்கும் நமது பரம பிதாவின் கரங்களில் நாம் ஜெயங்கொள்வோம்.

 

உரிமையோடு அவரிடத்தில் மன்றாடுவோம்.

 

பதில் நன்மையாக வருவது நிச்சயம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/Bk9upbbA7wo

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக