*சிலுவையினின்று பரதீசு*
by : Eddy Joel Silsbee
பரலோகத்திற்கு அழைத்து செல்ல வல்லவரான கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
செய்த குற்றத்திற்காக மரணதண்டனை பெற்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கள்ளன் *பரதீசிற்கு எப்படி போனான்?*
அவன் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டானோ? ஆகவே, எனக்கும் ஞானஸ்நானம் தேவையில்லை என்று அடம் பிடிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
ஆனால்,
ஒரு குற்றமும் செய்யாத தேவக்குமாரன் கிறிஸ்துவுடன் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த கள்ளனை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் கவனியுங்கள் :
* இயேசுவை - *தேவன்* என்று உணர்ந்திருந்தான் !! லூக். 23:40
* தான் பாவம் செய்தவன் என்று உணர்ந்தவன் !! வ41
* இயேசு குற்றமற்றவர் என்று அறிந்தவன். !! வ41
* இயேசுவை *தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டான்* !! வ42
* பரலோக இராஜ்யம் உண்டென்பதை அறிந்திருந்தான் !! வ42
* தன் உலக வாழ்க்கை முடிந்து தான் மரிக்கப் போவதை அறிந்தும், *மறு வாழ்வு உண்டு* என்று நம்பினான் !! வ42
இத்தனை தகுதிகளையும் கொண்டிருந்த அந்தக் கள்ளனை:
பாவங்களை மன்னிக்கும் வல்லமையும் அதிகாரமும் உடையவரான கிறிஸ்து இயேசு அவனுடைய பாவத்தை மன்னித்து பரதீசுக்கு அழைத்து சென்றார் !! (மத். 9:6)
சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து;
உயிர்தெழுந்தபின் தனது சீஷர்களுக்கு இட்ட கட்டளை : *பாவங்கள் மன்னிக்கப்பட ஞானஸ்நானம் எடுக்க சொன்னார்* !! மத். 28:18-19
சிலுவைக்கு முன்னர் இந்தக் கட்டளை கொடுக்கப்படவில்லையென்பதை நாம் உணரவேண்டும் !!
ஆகவே, நித்தியக் கட்டளைக்கு கீழ்படிய இன்னும் யோசிக்க வேண்டாம் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக