வியாழன், 31 மார்ச், 2022

கட்டுகளை உதறிவிட்டு தேவ வார்த்தைக்கு கீழ்படிவதே அவசியம்

*கட்டுகளை உதறிவிட்டு தேவ வார்த்தைக்கு கீழ்படிவதே அவசியம்*

by : Eddy Joel Silsbee

 

சிலுவை நாதர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

பொறாமையினாலே யூதர்கள், இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் (மத். 27:17). ஆனால், தான் சிலுவையில் அறையப்பட்டு மரிக்க இருப்பதை இயேசு முன்னமே அறிந்திருந்தார். (மத். 20:18-19)

 

அவர் பிறந்ததன் நோக்கமே இரத்தம் சிந்தி, நம்முடைய பாவங்களுக்காக பலியாக வேண்டும் என்பதே !! அதுவே பிதாவின் திட்டம். மத். 26:39, 53-54; யோ. 12:27, எபி. 10:5-9

 

கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் பிதாவானவர் நமக்கு அருளிய கிருபைகளில் சில கீழே பட்டியலிட்டிருக்கிறது.

 

அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார் (எபி. 9:26)

 

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொண்டார். (கொலோ. 1:20)

 

நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம். (ரோ. 5:10)

 

தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபி. 9:12)

 

ஆகையால், படிகாரத்திலும் மரத்திலும் மார்பிளிலும் கிரானைட்டிலும் கண்ணாடியிலும் மாலைகளை செய்து உருட்டினாலும்; வசனங்களை மந்திரங்களாகச் சொன்னாலும்; ஓலையிலும் மரத்திலும், வெள்ளியிலும் பொன்னிலும் சிலுவையை செய்து உருட்டினாலும்; அவைகள் சரீர கிரியைகள் மாத்திரமே. நீங்கள் செயல்படுத்தும் நற்காரியங்கள் அல்லது பலியும், காணிக்கையும், முறைமைகளும், உபவாசங்களும் நரகத்திலிருந்து இரட்சிக்காது. இயேசு கிறிஸ்துவின் வசனத்திற்கு அப்படியே கீழ்படிதலே நம்மை பரலோகம் கொண்டு செல்லும். ஏசா. 8:19; வெளி. 17:4-6; 2இரா. 22:17; வெளி. 3:2

 

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; எபி. 12:1

 

காலகாலமாய் கேட்டு *நம்பி பின்பற்றிக்கொண்டிருக்கும் கொள்கைக்கு மாறாக வேதத்தின் வசனங்கள் இருந்தால்*;

உங்களது கொள்கையை விட்டு வேத வசனத்திற்கு கீழ்படிந்து,

தன் உயிரையே கொடுத்து நம்மை மீட்ட *இயேசுவின் போதனைக்கு கீழ்படிவது அவசியம்*.

 

நமக்காய் பலியான கிறிஸ்து இயேசுவின் மீட்பிற்கு பாத்திரமாய் நடந்துகொள்வோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/vGHm_prH6v8

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக