*எதிரிகளின் நன்மை தேவ ஜனங்களைத் தேடிவரும்*
by : Eddy Joel Silsbee
அன்பின் ரூபமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொன்னதன் அர்த்தம் *“பொறுமையை”* குறிக்கிறது.
தன்னை விரோதிக்கிறவர்களையும் ஆதாயப்படுத்துவதன் நோக்கமாகவே கிறிஸ்து இருந்தார்.
அப்போஸ்தலர் பவுலும் கூட, “எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக் குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப் போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்” என்றார். (2கொரி. 11:12)
கிறிஸ்துவுக்கு விரோதியாய் நில்லாதவனைத் தடுக்கவேண்டாம் என்று சொன்னார் இயேசு கிறிஸ்து.. லூக். 9:50
எல்லா காலத்திலும் கிறிஸ்துவை எதிர்க்கும்படி ஜனங்கள் எழுந்தார்கள், எழும்புவார்கள். கிறிஸ்துவை உணர்ந்தவர்கள் தங்கள் ஆத்துமாக்களை சம்பாதித்தார்கள்.
சத்தியத்தை அறிந்தும் அதை ஏற்காமல் சுய கோட்பாடுகளை முன்னிறுத்தி சந்தோஷம் கண்டு முரண்பாடு கொள்பவர்களோ “விழுந்து போவார்கள்” மத். 21:44
எமோரியரின் அக்கிரமம் நிறைவாகும் வரை இஸ்ரவேல் ஜனம் கஷ்டப்பட்டது. அதாவது, எதிரிகள் கொண்டாட்டத்தில் இருக்கும் போது தேவஜனம் கஷ்டப்பட்டது. ஆதி. 15:16.
எமோரியரின் அக்கிரமம் மிகுதியான பொழுது பிடுங்கப்பட்டார்கள் !! அதாவது, எதிரியின் அக்கிரமம் நிறைந்த பொழுது; அவர்கள் இது வரை சீராட்டி வளர்த்தவைகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு தேவஜனத்திற்கு கொடுக்கப்பட்டது !! யாத். 3:8
அன்பும், நீடிய பொறுமையும், பராக்கிரமும், பயங்கரமுமான ஜீவனுள்ள தேவனை நாம் ஆராதிக்கிறோம்.
இயேசுவைப் போல, நாம் ஒரு போதும் எவர் மீதும், வெறுப்பு கொள்ளாமல் சகல பொறுமையோடும், ஜெபத்தோடும் இருப்போம்.
உத்தமமாய் இருந்தால் எதிரிகளின் நன்மை நம்மைத் தேடிவரும் !! நீதி. 16:7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/FW8FhKXkNJv6VhkmyK4QYg
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக