*என்னைவிட அவர் மேல்*
by : Eddy Joel Silsbee
தேவனுடைய ரூபமாயிருந்தும் முழுவதுமாய் தன்னை தாழ்த்தின கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மற்றவரை காட்டிலும் எப்போதும் *தானே மேலோங்கி* இருக்க வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் சுபாவம்.
“உங்களை போலவே அவரும் ஊழியம் செய்கிறார்” என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்;
சரமாரியாக மற்றவரின் குறைகளை அடுக்கி வைத்து அவரை காட்டிலும் தான் மேன்மையாக ஊழியம் செய்வதாக தனது ஊழியத்தை நிரூபிக்க முயல ஆரம்பித்துவிடுவார்கள்.
மறுபக்கம் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் கொடுத்து வருகிறாரே (யோ. 4:3) என்று யோவானிடத்தில் வந்த சீஷர்கள் கேட்டபொழுது யோவான் சொன்னதை கவனியுங்கள் *”அவர் பெருக நான் சிறுகவேண்டும்”* என்றார் !! (யோ. 3:26-36)
இப்படிப்பட்ட தாழ்மை நமக்கு மேலான பாடம் !!
தாழ்மையாய் இருக்க பழகுவோம்.
தவறான காரியத்தை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.
அதே நேரத்தில் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதும் நல்லவைகளைப் பாராட்டவேண்டியதும் அவசியம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/I_1dKXFaTAU
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக