*மரியாள் மேன்மையுள்ளவர். ஆனால் கும்பிடப்படுபவரல்ல !!*
by : Eddy Joel Silsbee
கன்னியாக இருந்தபோது மரியாளின் வயிற்றில் பிறந்த நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மரியாள் சகல ஸ்திரீகளுக்குள்ளும் ஆசீர்வதிக்கபட்டவரும் தேவனுடைய கிருபையையும் பெற்றவர் - லூக். 1:28
விசுவாசமும் தேவ பக்தியும் கொண்டவர்.
சமுதாயத்திற்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்தவர். லூக்கா 1:38
நம்மைப் போல சாதாரண மனிதராய் உலகஜனங்களின் பாவங்களை நீக்கும்படி இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வருவதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர் மரியாள். லூக்கா 1:34-35
எந்த ஸ்திரீயைக் காட்டிலும் மேன்மையானவர். லூக்கா 1:28
இத்தனை கிருபையும் தன்மையும் பெற்ற மரியாள்;
ஒரு போதும் தன்னை கடவுளாகவோ,
இயேசு கிறிஸ்துவுக்கு ஆலோசகராகவோ,
தேவை என்று வருபவர்களுக்காக இயேசுவிடம் சிபாரிசு செய்ததாகவோ எவரிடமும் சொன்னதே இல்லை.
வேதத்தில் அதற்கு துளியும் ஆதாரமும் இல்லை..
இதை செய்யலாமே என்று இயேசுவிடம் தாயாகிய மரியாள் கேட்டபோது… *தாய் என்று மறுமொழியாமல் ஸ்திரீயே !! உனக்கும் எனக்கும் என்ன என்று வினவினார்*? யோவான் 2:3
தனது பங்கை புரிந்துக்கொண்ட மரியாள், அங்குள்ள வேலைக்காரரிடம் ”*இயேசு கிறிஸ்து சொல்வதை கேளுங்கள்*” என்று தெளிவாய் சொன்னார். யோவான் 2:5
ஒரு தருணத்தில்,
இயேசு கிறிஸ்து உபதேசித்துக்கொண்டிருக்கும் போது “அறைக்கு வெளியே நின்று” மற்றவர்களோடு ஒருவராகவே இயேசுவின் வார்த்தைகளைக் கவனித்தவர் மரியாள். மத்தேயு 12:46
தான் கடந்து செல்லும் வேளை வந்தபோது,
இப்பூமியில் வருவதற்கு உதவிய, மாம்சத்தின்படி தனது தாயான மரியாளை கவனித்துக்கொள்ள ஒருவர் அவசியம் என்பதை உணர்ந்த இயேசு;
தனது சீஷன் யோவானிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். (யோ. 19:26-27) அதாவது, மரியாளை கவனித்துக்கொள்ள ஒருவர் அவசியப்பட்டார் என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.
மரியாள் புனித தாய்;
பெண்களில் அவர் உன்னதமானவர்;
மேன்மையானவர்;
பெண்களில் சிறந்தவர்;
ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று மரியாளைப் போற்றுகிறவர்கள்… *மரியாளின் வார்த்தைக்கு கீழ்படியவேண்டும். தன்னை வணங்கும்படி அவர் சொல்லாமல், கிறிஸ்து சொல்வதின்படி செய்யுங்கள் என்றார்*.. யோவான் 2:5
தேவனுடைய கிருபையை பூரணமாய் பெற்றுக்கொண்டு, ஆசீர்வதிக்கப்பட்ட கிருபைபெற்ற மரியாளை எவரும் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது.
ஆகவே, எவருடைய விசுவாசமும்,
பிரயாசமும் வீணாகாதபடிக்கு
நம்மை போன்ற பாடுள்ள சிருஷ்டியை அல்ல *தேவனையே நோக்கி* நாம் மன்றாட வேண்டும் !!
சிருஷ்டியை வணங்குபவர் விக்கிரக ஆராதனைக்காரராவர்.
வைராக்கியத்தினாலும் வீராப்பினாலும் ஒன்றும் நடக்காது.
விக்கிரக ஆராதனைக்காரர் எவரும் பரலோகத்தினுள் நுழையமுடியாது என்பதை உயிருள்ள போதே உணர்ந்துக் கொண்டு;
மனந்திரும்பி கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்படிந்து;
தேவனை மாத்திரமே வணங்கி;
இரட்சிப்பில் நிலைநின்றால் தங்கள் ஆத்துமாவை நித்திய அழிவிற்கு விலக்கிக்கொள்வர். 1கொரி. 6:9-10
நமது ஆத்துமாவை அழிவிலிருந்து காக்க இன்றும் காலமுள்ளது. நேரத்தை வீணடிக்காமல் இரட்சிக்கப்படுவது அவசியம்.
தேவன் நம்மீது வைத்த அன்பை நாம் புரிந்துக்கொண்டு துரிதமாய்க் கீழ்படிவோம். அவரது ஆசீர்வாதத்தைப் சுதந்தரித்துக்கொள்வோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/YiItgXB-_XI
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக