திங்கள், 1 நவம்பர், 2021

மாறாத அன்பு அவசியம்

*மாறாத அன்பு அவசியம்*

By : Eddy Joel Silsbee

 

நமக்காகத் தன் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

பாவத்திலிருந்து நம்மை மீட்டு எடுக்கத்தக்கதாக கிறிஸ்து தம்மையே நமக்காகக் கொடுத்தார்.

 

இடையிடையே நாம் முரண்டு பிடித்தாலும் நம்மீது அன்பு வைத்திருக்கிறார். நெகே. 9:30, ஏசா. 48:9, சங். 78:38, 103:8-10,

 

நமது பாவத்தை நாம் உணர்ந்து மனம் வருந்தும்போது மீண்டும் அணைத்துக்கொள்கிறார். 1இரா. 8:47-50, ஏசா. 30:15, எரே. 3:22

 

எத்தனை முறை அவருக்கு விரோதமாக நடந்திருந்தாலும், நம்மீது அவர் வைத்து இருக்கும் அன்பு துளியும் குறைவதில்லை. யோ. 17:12, 2பேதுரு 3:15, சங். 130:3, எஸ்றா 9:13-15, நெகே. 9:31, புல. 3:22

 

முற்றிலும் முழுவதுமாய் அவர் நம்மை நேசிப்பதாலேயே இது சாத்தியப்படுகிறது. எபே. 2:4, சங். 51:1, ரோ. 5:8, 1யோ. 4:9-10

 

தேவனே நம்மை இவ்வாறு நேசிக்கையில், அவரைப் பின்பற்றுகிற நாமும் எந்த சூழ்நிலையிலும் எந்த நிபந்தனையுமின்றி நம்முடன் இணைந்து ஒரே சரீரமாயிருக்கிறவர்களை எந்த சூழ்நிலையிலும் நேசிக்கத்தவறக்கூடாது. எபே. 5:2, 2:19-22, 4:15-17

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/201uD3H0VoA

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக