*இருளை நீக்கும் வெளிச்சம்*
by : Eddy Joel Silsbee
விடிவெள்ளி நட்சத்திரமாகிய (வெளி 22:16) இரட்சகர் இயேசு கிறிஸ்து தாமே நம்மை இன்னும்
அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
இருள் *தேவை என்றால்* ஒரு டார்ச் லைட் அடிக்கவோ, விளக்கை கொளுத்தவோ முடியாது. வெளிச்சம் தேவை என்றால் தான் அப்படிச் செய்ய முடியும்.
ஆனால், வெளிச்சம் *நீக்கப்பட்டாலோ* இருள் தானாகவே மீதம் இருந்துவிடும்.
அதுபோலவே,
நம்முடைய இருதயத்தில் ஆண்டவராகிய தேவன் என்ற வெளிச்சம் *இல்லாத பட்சத்தில்* இருளே இருதயத்தில் நிறைந்து இருக்கும்.
இருதயத்தின் இருளாகிய :
கசப்பு,
வைராக்கியம்,
சந்தேகங்கள்,
கோபங்கள்,
கூக்குரல்,
தூஷணம்,
அடங்காமை,
கீழ்படியாமை,
கூச்சல்,
கதறல்,
முனங்கல்,
முறுமுறுப்பு,
பெருமை,
ஆணவம்,
போன்ற எந்த அருவருப்பையும் விரட்டும் *வெளிச்சத்தை கர்த்தர் மாத்திரமே* கொடுக்க முடியும் (எபே. 4:30-32).
இருதயத்தினுள் வெளிச்சம் இருந்தால் முகம் பிரகாசமாகும் (நீதி. 27:19)
இருதயத்தில் உண்மையான வசனம் இருப்பின் சமாதானம் நிலைத்திருக்கும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*Q&A-Biblical Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
Website : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக