*சாயலா செயலா?* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 3 August
by : Eddy Joel Silsbee
வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
எப்படிப்பட்ட முக அமைப்பை நாம் கொண்டிருந்தாலும், அந்த ஜாடையையே தேவன் தன் விருப்பத்துடன் அமைத்து அவ்வாறு நம்மை இவ்வுலகிற்கு அனுப்பியது!
மூக்கு கொஞ்சம் நீளமா இருந்தா நல்லாயிருக்கும்,
கண்ணு கொஞ்சம் உருண்டையா பெருசா இருக்கனும்,
புருவம் மெலிசா இருந்தா நல்லயிருக்கும்,
தலைமுடி சுருட்டையா புஸ்னு இருக்கனும்,
வெள்ளையா பளீர்னு இருந்தா நல்லயிருக்கும் என்று இப்படி மாறி மாறி யோசிக்க வேண்டாம்.
எவை எப்படி இருக்க வேண்டும் என்று தேவனே தீர்மானித்து நம் சரீரத்தில் வைத்திருக்கிறார் (1கொரி. 12:18)
மனிதனை அவர் தன் சொந்த கரங்களினால் செய்தார் என்று நாம் மார்தட்டிக்கொண்டாலும், மிருகங்களையும், பறவைகளையும் கூட அவர் தான் தன் சொந்த கையினால் மண்ணைக் கொண்டு செய்து சுவாசம் கொடுத்து அழகு பார்த்தவர். (ஆதி. 2:19)
அவர் செய்த அத்தனையும் நேர்த்தியானவை, அவருக்கு மகிமை செலுத்துவது நம் கடமை.
அதை மாற்ற முயற்சிக்க வேண்டாம்.
ஒரிஜினல் எப்பவும் தரம் வாய்ந்தது!!
சாயலில் கவனம் செலுத்தாமல், செயலில் கவனத்தை செலுத்துவோம். சாயலை விட செயலே நிரந்தரமும் அழகுமுள்ளது !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/phUjiWHRMpo
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக