திங்கள், 5 ஜூலை, 2021

*நம்மை உயர்த்தாமல் தேவன் யாரை உயர்த்துவார்? தினசரி சிந்தனைக்கான வேத துளி

*நம்மை உயர்த்தாமல் தேவன் யாரை உயர்த்துவார்? - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 05 July

by : Eddy Joel Silsbee

 

நம்முடைய பிதாவாகிய தேவன் தாமே நம்மை பெலப்படுத்தி வழிநடத்துவாராக.

 

ஒரே நாளில் அனைத்து பிள்ளைகளையும் எல்லா சொத்துக்களையும் இழந்து நின்றார் யோபு 1:2-3, 14-19.

 

இளவரசன் என்ற அஸ்தஸ்தை விட்டு ஆடு மேய்க்க போனார் மோசே.  எபி. 11:24-26.

 

இராஜாங்கத்தை விட்டு விரட்டப்பட்டார் தாவீது. 2சாமு. 15:14-18

 

அரண்மனையிலிருந்து சிறைக்கும், சிங்க கெபிக்கும் அனுப்பபட்டார் தானியேல். தானி. 6:16

 

*தேவனை மாத்திரம் பற்றிக்கொண்டு வைராக்கியமாய் இருந்ததாலே*:

 

எகிப்திய இளவரசன் என்பதைக் காட்டிலும், மாம்சத்தின்படி அடிமையின் பிள்ளையாக தேவன் தெரிந்துகொண்ட இஸ்ரவேலனாய் இருக்க பிரியப்பட்டதாலே மோசேயும்,

 

விடாப்பிடியாய் தேவனையே சார்ந்து இருந்ததாலே தாவீதும்,  தானியேலுமாக;

 

இப்படி பலரது வாழ்க்கை அதி உயரத்தில் போனதை நாம் வேதத்தில் பார்க்கிறோம்.

 

தற்காலம் கஷ்டமாய் இருந்தாலும், விசுவாசத்தில் வைராக்கியமாய் இருப்போம்.

 

தேவன் நம்மை உயர்த்தாமல் யாரை உயர்த்தபோகிறார்?  (1யோ. 5:5)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/CkgWa_4h3Gk

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக