சனி, 31 ஜூலை, 2021

தேவனிடத்திலிருந்தே ஞானம் வருகிறது - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*தேவனிடத்திலிருந்தே ஞானம் வருகிறது* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 31 July

by : Eddy Joel Silsbee

 

ஞானத்தின் ஊற்றுக்கண்ணாகிய தேவனே நம்மை பாதுகாப்பாராக.

 

கிட்டத்தட்ட 40வருஷமாக கூடவே இருந்த மோசே கடந்துப் போனதும், இவ்வளவு பெரிய பொறுப்பை எப்படி சமாளிப்பது என்று தனியே விடப்பட்ட யோசுவா பயந்துப்போனார்.

 

அடிப்படையில் பார்க்கும் போது,

படிப்பை வைத்தோ,

தகுதியை வைத்தோ யாரும் அதிகாரத்திற்கு தெரிந்தெடுக்கப்படுவதில்லை.

கடவுள் பயமே முதலாவதாக வருகிறது. (யாத். 18:21, ரோ. 13:1)

 

அதைத் தக்கவைத்துகொள்வதும் நேர்த்தியாய் உபயோகப்படுத்துவதும் தேவனுக்குப் பயப்படும் பயத்தில் இருக்கிறது (யோசு. 1:9)

 

கற்றுக்கொண்ட பாடங்களை (அறிவு) சரியான நேரத்தில் பயன்படுத்தும் ஞானத்தை அவரிடம் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் (யோபு 28:12-13, கொலோ. 2:3)

 

நமக்கு இருக்கும் காரியங்களை நேர்த்தியாய் செய்து முடிக்கும் ஞானத்தை நம்முடைய தேவனிடத்தில் கேட்டுப் பெற்றுகொள்வோம்.  யாக். 1:5.

 

ஞானத்தை தேவனிடத்திலன்றி வேறு எங்குமே பெற்றுக்கொள்ள முடியாது. யோபு 28:12-28, 1தீமோ. 6:20

 

எவ்வளவு படித்திருந்தாலும்,

அறிவை வளர்த்திக்கொண்டாலும்,

உண்மையான தேவனைப் பற்றிக்கொள்ளாவிடில் *ஞானம் இல்லாமல் முட்டாளாகவே நாட்களை கழிக்க வேண்டிவரும்*. ரோ. 1:28, ஆதி. 6:11-12, மத். 15:19, யோ. 3:19-20

 

ஞானம் வேண்டுமானால் அதைத் தருகிறவரிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும். யாக். 1:5, 17, யாத். 31:6, 1இரா. 3:9

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/IDoWzBWn1Rg

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக