*வீட்டுக்கு மனைவி அலங்காரம்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 25 July
by : Eddy Joel Silsbee
பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக.
டேய் ஆபிரகாம் என்றோ,
பெயரைச் சொல்லி கூப்பிட்டோ அல்லாமல்,
சாராள் தன் *கணவன் ஆபிரகாமை “ஆண்டவர்*” என்று அழைத்து கீழ்படிந்து இருந்தார். (1 பேதுரு 3:6)
சமுதாயத்தில், தன் புருஷனுக்கு மேன்மையை கொடுக்கும் கிரீடமாக மனைவி இருக்கிறார் (நீதி. 12:4)
இதை மறந்து,
எந்நேரமும் மனைவியானவள்;
புருஷனை நச்சரித்துக்கொண்டே,
முணுமுணுத்துக் கொண்டே,
உங்களுக்கு என்ன தெரியும் சும்மா இருங்கள் என்றால்;
கணவனுக்கு கிரீடமாக அல்ல அவன் தலைக்கு பாரமாக தோன்றும்.
எதற்கெடுத்தாலும் நொச்சு நொச்சுனு இருந்தால்,
வீட்டின் நடுவிலிருந்து இருந்து கணவன் ஆளுமை செய்யாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என்று அவன் போக்கில் இருந்து விடுவான் (நீதி. 25:24).
மனைவியானவள் தன் வீட்டை கட்ட வேண்டும் (நீதி. 14:1)
அப்போது அவள் தன் வீட்டுக்கு *அலாரமாக இல்லாமல் அலங்காரமாய் இருப்பாள்*. (நீதி. 31:10)
தன் சொந்த புருஷனுக்கு மனைவி அடங்கியிருக்க வேண்டும் (எபே. 5:22).
*அப்பொழுது அந்த வீடு சந்தோஷத்திலும் சமாதானத்திலும் திளைத்திருக்கும்*.
(கணவனுக்கான செய்தி நாளைக்கு) !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக