ஞாயிறு, 25 ஜூலை, 2021

வீட்டுக்கு மனைவி அலங்காரம்- தினசரி சிந்தனைக்கான வேத துளி

*வீட்டுக்கு மனைவி அலங்காரம்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 25 July

by : Eddy Joel Silsbee

 

பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக.

 

டேய் ஆபிரகாம் என்றோ,

பெயரைச் சொல்லி கூப்பிட்டோ அல்லாமல்,  

சாராள் தன் *கணவன் ஆபிரகாமை “ஆண்டவர்*” என்று அழைத்து கீழ்படிந்து இருந்தார். (1 பேதுரு 3:6) 

 

சமுதாயத்தில், தன் புருஷனுக்கு மேன்மையை கொடுக்கும் கிரீடமாக மனைவி இருக்கிறார் (நீதி. 12:4)

 

இதை மறந்து,

எந்நேரமும் மனைவியானவள்;

புருஷனை நச்சரித்துக்கொண்டே,

முணுமுணுத்துக் கொண்டே,

உங்களுக்கு என்ன தெரியும் சும்மா இருங்கள் என்றால்;

கணவனுக்கு கிரீடமாக அல்ல அவன் தலைக்கு பாரமாக தோன்றும்.

 

எதற்கெடுத்தாலும் நொச்சு நொச்சுனு இருந்தால்,

வீட்டின் நடுவிலிருந்து இருந்து கணவன் ஆளுமை செய்யாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என்று அவன் போக்கில் இருந்து விடுவான் (நீதி. 25:24).

 

மனைவியானவள் தன் வீட்டை கட்ட வேண்டும் (நீதி. 14:1)

 

அப்போது அவள் தன் வீட்டுக்கு *அலாரமாக இல்லாமல் அலங்காரமாய் இருப்பாள்*. (நீதி. 31:10)

 

தன் சொந்த புருஷனுக்கு மனைவி அடங்கியிருக்க வேண்டும் (எபே. 5:22).

 

*அப்பொழுது அந்த வீடு சந்தோஷத்திலும் சமாதானத்திலும் திளைத்திருக்கும்*.

 

(கணவனுக்கான செய்தி நாளைக்கு) !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*                                         

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Cjx3SVn193A

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக