*சத்தியத்திற்குள் நிலைத்திருப்போம்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 13 July
by : Eddy Joel Silsbee
நம்மை இரட்சித்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அவசரத்தில் கதவை அடைத்த போது பிள்ளையுடைய விரல் நசுங்கி இருந்தால், ஒரு காலத்திலும் எவ்வளவு அவசரத்திலும் கவனிக்காமல் கதவை மூடவே மாட்டோம். கதவை அடைக்கும் போதெல்லாம் பிள்ளை நினைவில் வருவான்.
நான் செய்த பாவத்திற்காக,
எந்த பாவமும் குற்றமும் இல்லாத நீதிமானாகிய இயேசு கிறிஸ்து தண்டனையை ஏற்றுக்கொண்டாரே என்று (1பேதுரு 2:24);
நினைவு கூர்ந்து கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்கிறோம்.
அது போலவே, மது பாட்டிலையோ அல்லது சிகரெட்டையோ தொடும் போதும், விக்கிரகத்தையோ, இயேசு என்ற ஒரு படத்தையோ, சிலுவையையோ தொட்டு கும்பிட போகும் போதும்;
அது தேவனுக்கு விரோதமான பாவம் என்பது *நினைவில்* வரவேண்டும்.
பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைய அது உதவுகிறது. 1பேதுரு 1:15
வாரத்தின் முதல் நாள் தோறும் கடை பிடிக்க வேண்டியதை தங்கள் கொள்கைக்காக மாதத்திற்கு ஒருமுறை என்று மாற்றினவர்கள், கொள்ளைநோய் கொரோனாவை காரணம் காட்டி கர்த்தருடைய பந்தியை பொழுது போக்காக ஆக்கி விட்டது வேதனையிலும் வேதனை.
இவ்வாறு பலவேறு வகையில் சாத்தான் முயற்சி செய்துக்கொண்டே தான் இருப்பான்.
நாம் தான் விழிப்போடு இருந்து வேதத்திற்குள் நிலைத்திருக்க வேண்டும்.
சபை ஐக்கியத்தை முறையாகப் பற்றிக்கொண்டு இன்னும் அதிகமாய் திடப்படுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக