*எருசலேம் சுவர் கீழ்படியாமையின் எதிரொலி - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 29 June
by : Eddy Joel Silsbee
என்றென்றும் மாறாதவராயிருக்கிற தேவனே உங்களை இந்நாளில் ஆசீர்வதிப்பாராக !
எருசலேம் தேவ ஆலயத்தை கட்டிமுடித்த பொழுது, என்னுடைய நாமம் *என்றென்றும் இந்த ஆலயத்தில் இருக்கும்படி இந்த இடத்தை தெரிந்து கொண்டேன்* என்று தேவன் சொன்னார். (2நாளா. 7:16)
அதோடு நில்லாமல் அந்நேரத்தில்தானே ஒரு நிபந்தனையும் வந்தது.
தேவனுடைய வார்த்தைக்கான *ஜனங்களின் கீழ்படிதல் தவறும் பட்சத்தில் என் மகிமை எடுக்கப்பட்டு அந்த இடத்தையும் பாழாக்கி சாட்சியாய் நிறுத்துவேன்* என்றார். (2நாளா. 7:20)
இஸ்ரவேலர்களின் கீழ்ப்படியாமையின் விளைவையே நாம் இக்காலங்களிலும் பார்த்துக்கொண்டு இருக்கும் எருசலேம் தேவாலயத்தின் எஞ்சியிருக்கும் சுவர் Wailing Wall !!!
தேவனுக்கு கீழ்படியாமல்,
அந்த சுவரில் போய் நின்று அழுது புரண்டாலும் சுவற்றினுள் கடிதம் எழுதி சுருட்டி வைத்தாலும் பிரயோஜனமில்லை.
*அந்த சுவரை பார்க்கும் போது இஸ்ரவேலரின் மீறுதலை தான் நாம் உணர வேண்டும்*. (2நாளா. 7:19-22)
தேவன் தம் மகிமையுடன் நம்முடைய வாழ்க்கையிலும் தங்க வேண்டுமெனில், அவருடைய *கட்டளைக்கு கீழ்படிவோம். அதன் படி செயல்படுவோம்*.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக