*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அந்த கனியை புசிக்க வேண்டாம் என்று “ஆதாமிடத்தில்” தேவன் சொன்னார். அப்போது ஏவாள் உருவாக்கப்பட்டிருக்கவேயில்லை. (ஆதி. 2:15-18)
தான் மீறின போதோ *ஏவாள் மீது பழியைப்போட்டார்* ஆதாம். (ஆதி. 3:12)
ஏவாளிடத்தில் விசாரித்தப் போதோ – சர்ப்பம் மீது பழியை போட்டார். (ஆதி. 3:13)
தன்னை கவனிக்காமல் மற்றவர் மீது பழியை போடுவது, தொடக்கத்திலிருந்தே பிசாசு திணித்த ஒரு குணம்.
ஆரம்பத்தில் தேவனோடு அன்பாகவும், நேரடியாகவும், நண்பனாகவும் உறவாய் பழகின ஆதாம், இப்போது – நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து மறைந்து கொள்கிறார் !! (ஆதி. 3:10)
இரட்சிக்கப்பட்ட நாமோ பிதாவின் அன்பை ருசிபார்க்கவும், கிறிஸ்துவின் அன்பை அனுபவிக்கவும் தைரியமாய் கிருபாசனத்தண்டை சேருவோம். எபி. 4:16
கிறிஸ்துவானவர் தன் சகல முக்கியத்துவத்தையும் பிதாவிற்கு கொடுத்தார் என்பதை அறியவேண்டும்.
தலைமைத்துவம் கிறிஸ்துவோடு நின்றுவிடுவதல்ல. இறுதியாக அனைத்து மகிமையும் தேவனாகிய பிதாவிற்கே என்பதை நாம் நினைவில் வைத்து எப்போதும் நம் துதிகளும் ஸ்தோத்திரங்களும் பிதாவிற்கு செலுத்த கடமைப்படுகிறோம். யோ. 16:28, 1 கொரி. 15:28, 1கொரி. 3:23, 1கொரி. 11:3
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. பிலே. 3
(You may ask for English Version, if required)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக