செவ்வாய், 8 டிசம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 8 Dec 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

நம் மீது எப்போதும் கரிசனையாய் இருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தேவனே தன் சொந்த கரங்களால் எழுதி மோசேக்கு கொடுத்த அந்த இரண்டு கற்பலகைகளையும், ஜனங்கள் மீது இருந்த கோபத்தில் உடைத்துப்போட்டார் மோசே. யாத். 32:19

அவர் மீது தேவன் கடுங் கோபங்கொண்டாலும், மோசேயை தண்டிக்காமல், இரண்டாம் முறையும் அவரே எழுதி கொடுத்தார்*. உபா. 10:1-4, யாத் 34:27

ஆனால்,
மலையை பார்த்துப் *பேசு* என்று தேவன் சொன்ன போது, (எண். 20:8)
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை இப்படி பரீட்சைப்பார்க்கிறார்களே என்ற கோபத்தில், (எண். 20:2-5)
*பேசு என்று தேவன் சொன்னதை மறந்து*,
பழைய நினைவில், (யாத். 17:6)
மோசே மலையை அடித்ததால், (எண். 20:11)
கானானுக்குள் நுழைய தேவன் மோசேயை அனுமதிக்கவில்லை. (எண். 20:12)

தேவனுடைய கட்டளைகளை தாங்கிச் செல்வதில் இருக்கின்ற பொறுப்பை காட்டிலும், *அப்படியே கீழ்ப்படிவது* மிக அவசியம்.  

ஏனென்றால், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் அது நன்மையானாலும், தீமையானாலும், தேவன் கணக்கு வைத்துகொண்டு இருக்கிறார். பிர. 12:14

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய :  https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில :  http://kaniyakulamcoc.worldbibleschool.org/
 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக