புதன், 11 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 11 Nov 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee


உன்னதமான தேவனின் ஆசீர்வாதம் நம்மை தொடர்ந்து ஆளுவதாக.

கிறிஸ்தவ ஊழியர்களாகிய நாம் பூலோகத்திற்கான வேலை அல்ல, பரலோகத்தின் ராஜாவிற்கு வேலை செய்கிறோம்.

அதில் எந்த சோர்வும் இல்லாமல் உற்சாகமாக, இன்னும் அதிக பெலத்தோடு பிரயாசப்பட முற்படுவோம்.

கடைசி நிமிடம் என்று பிசாசு அறிந்ததால்,
நமக்கு எதிராய் அவன் இன்னும் அதிக ஆக்ரோஷத்தோடு வருகிறான். ஆனாலும், இந்த உலகத்தை ஜெயித்தவர் நம் பக்கம் உண்டு.

நம்மை அழைத்தவர் பரிசுத்தமுள்ள சர்வ அதிகாரமும் மகத்துவமும் சகல வல்லமையுமுள்ள தேவன் !!

செய்கையின் பலன் ஒருவேளை தாமதம் ஆகலாம் – ஆனால் நாம் ஒழுங்காக ஓடவேண்டிய பாதையில் ஓடுகின்ற வரை, ஒருவரும் அதை நம்மிடம் இருந்து பறித்துக்கொள்ள முடியாது.

உற்சாகமாய் பரலோக வேலையை செய்யும் போது, ஆத்தும ஆதாயத்தை நிச்சயம் ஆண்டவர் தருவார் என்பதை தாவீது அறிந்து வைத்து இருக்கிறார்.

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். சங். 51:12-13

புதிய நாளில் புதிய உற்சாகத்தோடு இன்னும் முன்னேறுவோம்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக