வியாழன், 22 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 22 Oct 2020


தினசரி சிந்தனைக்கான வேத துளி

by : Eddy Joel Silsbee

வாக்கு மாறாத தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

ஏற்ற நேரத்தில்,
உள்ளதை இல்லை என்றும்;
இல்லாததை உள்ளது என்றும் சொல்பவர்களை - புத்திசாலி என்று சொல்வதில் காலம் தன்னை மெச்சிக்கொள்கிறது.

அறிந்தோ அறியாமலோ, கிறிஸ்துவை அறிந்தவர்களையும் பிசாசு இந்த வலைக்குள் சிக்க வைத்திருக்கிறான்.

அளவாய் பேசுவதும்,
சரியாய் பேசுவதும்,
முறையாய் பேசுவதும்,
சொன்னதை மாற்றி பேசாமலும்,
உள்ளதை தவறாய் சொல்லாமலும் -
நம்முடைய ”வாக்கை” உறுதியாகவும் செம்மையாகவும் வைத்துக்கொள்வோம்.

வசனங்கள் இப்படியாய் உள்ளது :
புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான் – நீதி 17:20

அலப்புகிற மூடன் விழுவான் – நீதி 10:10

ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும் – பிர 10:12

நம் அப்பா வாக்கு மாறாதவர்…
அவர் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போலவே வாக்கைமாற்றாமல் இருப்போம். 1பேது 1:15-16, 1தெச 1:2-4

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக