*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிற அனைவரும் தேவனுடைய பிள்ளையாக ஆகலாம் என்றார். யோ 1:12
யூதர்கள் –> யூதர் அல்லாதவர்களை (புறஜாதியினரை) கீழ் ஜாதி என்ற மமதையில் அவர்களோடு எதற்காகவும் கலந்து கொள்ள மாட்டார்கள். திருமணம் செய்யவோ, ஒன்றாக உறவாடவோ கூடாதென்று அவர்களுக்கு பிரமாணமே கொடுக்கப்பட்டது. உபா 7:3, யாத் 34:15-16
இயேசு கிறிஸ்துவோ, இஸ்ரவேலருக்கென்று பிரத்தியட்சமாய் கொடுக்கப்பட்ட 10+603=613 மொத்த நியாயப்பிரமாணத்தையும் சிலுவையில் நிறைவேற்றி நியாயபிரமாணத்தை
முடித்து வைத்து புதிய ஏற்பாட்டை / புதிய கட்டளையை / புதிய உடன்படிக்கையை இஸ்ரவேலர் உட்பட உலகத்திலிருக்கும் அனைவருக்காகவும் ஏற்படுத்தினார். ரோ 10:4, எரே 31:31, 2கொரி 3:6; எபி 8:6-13, 9:15, 10:16-17, 12:24, 13:20
அந்த புதிய காலத்தின் / கட்டளையின் கீழ் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கர்த்தருடைய பந்தியில் திராட்சை ரசத்தை பருகும் போது இது நமக்கு நினைப்பூட்டுகிறது. 1கொரி 11:25
இவ்வாறு எந்த வித்தியாசத்தையும் காண்பிக்கூடாத புதிய ஏற்பாட்டு காலத்தில் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளையை மீறி - கிறிஸ்தவர்கள் என்று வந்த பின்பும் மேல் ஜாதி, கீழ் ஜாதி, என் ஜாதி, என் பிரிவு என்று வித்தியாசத்தை பார்ப்பது தேவ கட்டளைக்கு செய்யும் துரோகம்! மத் 28:19-20,
கிறிஸ்தவன் ஆன பின்பு அவன்(ள்) *கிறிஸ்தவர்* தான்.
இதில் முதலியார் கிறிஸ்தவர், நாடார் கிறிஸ்தவர், பிள்ளை கிறிஸ்தவர், பரையர் கிறிஸ்தவர், வன்னியர் கிறிஸ்தவர் மற்றும் ஏராளமான பிரிவை தன் பெயரிலும் சமுதாயத்திலும் திருமண பந்தத்திலும் வெளிப்படுத்துவது கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும் பிதாவின் அன்பையும் வீணிலே வழங்கும் செயல். எபே 2:14-18, கலா 3:28, ஏசா 65:5, லூக் 7:29-30.
ஞானஸ்நானம் எடுத்ததும் கிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம் என்கிறது வேதம். கலா 3:27.
கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அங்கமாக தேவன் இணைத்துவிட்டாரே. அப் 2:47, ரோ 12:5
அப்படியென்றால் கிறிஸ்துவை போர்த்திக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பாகமாக இருந்து கொண்டு தன்னை வேறு ஜாதியான் என்று எப்படி அடையாளம் காண்பிக்க முடியும்?
ஆம்.... முழுமையாக, கிறிஸ்தவத்தில் இருப்பவர்கள் தங்களை எந்த ஜாதியோடும் அடையாளப்படுத்த முடியாது. ஏனென்றால் ஜாதி பிரிவு இந்துக்களின் கோட்பாடு.
புரியாமல் இதுவரை நடந்து கொண்ட குறைகளைக் அடையாளம் கண்டு, களைந்து - கிறிஸ்தவத்திற்கு திரும்ப வேண்டும்.
வாழ்வையும் மரியாதையையும் வெற்றியையும் ஜீவனையும் மக்கள் மத்தியில் மேன்மையான அடையாளத்தே கிறிஸ்துவே நமக்கு தருகிறார். ஜனங்கள் நம்மை அல்ல கிறிஸ்துவை காண்கிறார்கள். கொலோ 3:11, கலா 3:16, 2:20
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக