சனி, 11 ஜூலை, 2020

By : *Eddy Joel Silsbee* - *தினசரி சிந்தனைக்கான வேத துளி* 11 July 2020


By : *Eddy Joel Silsbee*  -   *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ள தேவன் நம்மை நேர்த்தியாய் வழிநடத்துவாராக.

இவர் தான் இரட்சகர், தீர்க்கதரிசி, மேசியா என்றும், மற்றவர்கள் சொல்வதால் அல்ல நாங்களே சொந்த புத்தியில் இவர் தான் மெய்யான கிறிஸ்து என்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் சமாரியர்கள். மேலும், தன் வழியில் சென்று கொண்டு இருந்தவரை நிறுத்தி இன்னும் 2நாள் தங்கள் ஊரில் தங்கும்படி வற்புறுத்தி இயேசு கிறிஸ்துவின் மீது தங்களுடைய அன்பை வாரி பொழிந்தனர். (யோ 4:39-42)

ஆனால், அதே இயேசு கிறிஸ்து, மறுபடியும் அந்த ஊருக்கு திரும்பி வரும் போதோ அவர் தங்கள் எதிரி ஊர் எருசலேமுக்கு போகிறார் என்று அறிந்து அவரை ஊருக்கு உள்ளேயே அனுமதிக்கவில்லை !! (லூக் 9:52-53)

இயேசுவாக இருந்தாலும் பகையுணர்வு - ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு மோசமாய் போனது.

வடக்கிற்கும் தெற்கிற்கும் எவ்வளவு தூரமோ அதே தூரத்தை தங்கள் அன்பிலும் வெளிப்படுத்துகிற கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவர்களும் ஊழியர்களும் இருப்பது வேதனை !!

ஆம்... வெறுப்பும் பகையுணர்வும் நம்முடைய இரட்சிப்பிற்கே தடை.

பகை உணர்வை உதறி தள்ள வேண்டும்.

நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?  நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. 1கொரி 6:7-8

தவறு செய்தவர் அவரானாலும், நீங்களானாலும்...*தேவனுடைய சமூகத்தை யார் நாடுகிறார்களோ – அவர்களே முதலாவது தங்களை சரிபடுத்திக்கொள்ளவேண்டுமாம் !! அப்படியென்றால் ஒப்புரவாகாமல் இருக்கும் எந்த ஜெபமும் நம் வாயோடே இருந்துவிடுமோ?

வேதாகமத்தை கையில் எடுப்பதற்கு முன்னர் இந்த தீர்மானத்திற்கு வர வேண்டிய கட்டாயம் உண்டு. மத் 5:23-24, மத் 18:15-17, ரோ 12:18

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக