வியாழன், 9 ஜூலை, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 09 July 2020


By : *Eddy Joel Silsbee*  -   *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

நம்மை உருவாக்கிய பிதா தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

ஆவி ஆத்துமா சரீரம் – இந்த மூன்றும் சேர்ந்தது தான் நாம் (1தெச 5:23)

தேவன் தன் சொந்த கரங்களினால் – சரீரத்தை  மண்ணினால் உருவாக்கினார். மரிக்கும் போது (ஆவி பிரிந்ததும்) சரீரம் மண்ணுக்கு திரும்புகிறது. பிர 3:20, சங் 146:4, 104:29, ஆதி 3:19

தன்னுடைய ஆவியை மனுஷனுடைய நாசியிலே ஊதி உயிர் கொடுத்தார். மரிக்கும் போது இந்த ஆவியும் தேவனிடத்திற்கு திரும்புகிறது. பிர 12:7

நமக்கு கொடுக்கப்பட்ட ஆத்துமா இரட்சிக்கப்படும்போது கிறிஸ்துவினுடைய சபையில் (சரீரத்தில்) சேர்க்கப்படுவதால் (மாற்கு 14:22, ரோ 12:5, 1கொரி 12:27, எபே 1:23, 2:16, 4:12, கொலோ 1:24, 3:15, அப் 2:47) ;  மரிக்கும் போது செய்கைக்கு தக்கதாக பாதாளத்திலோ பரதீசிலோ கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் வைக்கப்படுகிறது. லூக்கா 16:22-23

கிறிஸ்துவின் வருகையிலே, எல்லோரும் அழியாத புது சரீரம் பெற்று மறுரூபமாகி நியாயதீர்ப்புக்கு நிற்கவேண்டும். (1 கொரி 15:35-58)

ஆகவே – சுவாசம் இருக்கும் போதே - நித்திய ஜீவனுக்கு உரிய உத்திரவாதத்தை பெற்றுக்கொள்ள தவற வேண்டாம். அப் 22:16, மத் 10:22, எபி 3:6, 14, 6:12, வெளி 2:26

கர்த்தருக்கென்று காத்திருப்போம் – சகலத்தையும் நன்மையாக்க அவர் ஒருவரே வல்லவர்.. சங் 5:3, 59:9, ஏசா 30:18..

(குறிப்பு வசனங்களை வேதத்தை எடுத்து வாசித்து தியானிக்கவும்)


*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக