By
: *Eddy Joel Silsbee* - *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
நம்மை உருவாக்கிய பிதா தாமே நம்மை
ஆசீர்வதிப்பாராக.
ஆவி ஆத்துமா சரீரம் – இந்த மூன்றும் சேர்ந்தது
தான் நாம்
(1தெச 5:23)
தேவன் தன் சொந்த கரங்களினால் – சரீரத்தை மண்ணினால் உருவாக்கினார். மரிக்கும் போது (ஆவி பிரிந்ததும்) சரீரம் மண்ணுக்கு திரும்புகிறது. பிர
3:20, சங் 146:4, 104:29, ஆதி 3:19
தன்னுடைய ஆவியை மனுஷனுடைய நாசியிலே ஊதி
உயிர் கொடுத்தார். மரிக்கும் போது இந்த ஆவியும் தேவனிடத்திற்கு திரும்புகிறது. பிர
12:7
நமக்கு கொடுக்கப்பட்ட ஆத்துமா இரட்சிக்கப்படும்போது
கிறிஸ்துவினுடைய சபையில் (சரீரத்தில்) சேர்க்கப்படுவதால்
(மாற்கு 14:22, ரோ 12:5, 1கொரி 12:27,
எபே 1:23, 2:16, 4:12, கொலோ
1:24, 3:15, அப் 2:47) ; மரிக்கும் போது செய்கைக்கு தக்கதாக
பாதாளத்திலோ பரதீசிலோ கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் வைக்கப்படுகிறது. லூக்கா
16:22-23
கிறிஸ்துவின் வருகையிலே, எல்லோரும் அழியாத
புது சரீரம் பெற்று மறுரூபமாகி நியாயதீர்ப்புக்கு நிற்கவேண்டும். (1 கொரி 15:35-58)
ஆகவே – சுவாசம் இருக்கும் போதே - நித்திய
ஜீவனுக்கு உரிய உத்திரவாதத்தை பெற்றுக்கொள்ள தவற வேண்டாம். அப் 22:16, மத் 10:22, எபி 3:6, 14, 6:12, வெளி 2:26
கர்த்தருக்கென்று காத்திருப்போம் – சகலத்தையும்
நன்மையாக்க அவர் ஒருவரே வல்லவர்.. சங் 5:3, 59:9, ஏசா
30:18..
(குறிப்பு வசனங்களை வேதத்தை எடுத்து
வாசித்து தியானிக்கவும்)
*Eddy
Joel Silsbee*
Preacher
– The Churches of Christ
Teacher
– World Bible School
WhatsApp
# +91 8144 77 6229
Bible
Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக