பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும்
சமாதானத்தையும் தருவாராக.
டேய் ஆபிரகாம் என்றோ பெயரை சொல்லி
கூப்பிட்டோ அல்லாமல், சாராள், தன் கணவன் ஆபிரகாமை “ஆண்டவர்” என்று அழைத்து
கீழ்படிந்து இருந்தார். (1 பேது 3:6)
சமுதாயம் மனைவியை காணும் போது அது அவள்
புருஷனுக்கு மேன்மையை உருவாக்கும் கிரீடமாக மனைவி இருக்கிறார் (நீதி 12:4)
மாறாக - மனைவியானவள் எந்நேரமும் புருஷனை
நச்சரித்துக்கொண்டே, முணுமுணுத்துக் கொண்டே,
உங்களுக்கு என்ன தெரியும் சும்மா இருங்கள் என்றால் – கணவன் தலையில் கிரீடமாக
எண்ணப்படுவது தலைக்கு கனமாக (பாரமாகி) போகும்.
எதற்க்கெடுத்தாலும் நொச்சு நொச்சுனு இருந்தால்,
கணவன் வீட்டின் நடுவில் இருந்து ஆளுமை செய்யாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என்று அவன்
போக்கில் இருந்து விடுவான் (நீதி 25:24).
மனைவி, வீட்டை கட்ட வேண்டும் (நீதி 14:1)
அவள் – தன் வீட்டுக்கு *அலாரமாக இல்லாமல்
அலங்காரமாக* இருக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது (நீதி 31:10)
மனைவி, தன் சொந்த புருஷனுக்கு அடங்கி இருக்க
வேண்டும் (எபே 5:22).
அப்போது மாத்திரமே – அந்த வீடு
சந்தோஷத்திலும் சமாதானத்திலும் திளைத்திருக்கும்.
** கணவனுக்கான குறுஞ்செய்தி - நாளைக்கு !!
*Eddy
Joel Silsbee*
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp
Groupல் இணைய :
** அணைத்து கேள்வி பதில்களையும் காண
: https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக