சனி, 27 ஜூன், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 27 June 2020


பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக.

டேய் ஆபிரகாம் என்றோ பெயரை சொல்லி கூப்பிட்டோ அல்லாமல்,  சாராள், தன் கணவன் ஆபிரகாமை “ஆண்டவர்” என்று அழைத்து கீழ்படிந்து இருந்தார். (1 பேது 3:6) 

சமுதாயம் மனைவியை காணும் போது அது அவள் புருஷனுக்கு மேன்மையை உருவாக்கும் கிரீடமாக மனைவி இருக்கிறார் (நீதி 12:4)

மாறாக - மனைவியானவள் எந்நேரமும் புருஷனை நச்சரித்துக்கொண்டே, முணுமுணுத்துக் கொண்டே, உங்களுக்கு என்ன தெரியும் சும்மா இருங்கள் என்றால் – கணவன் தலையில் கிரீடமாக எண்ணப்படுவது தலைக்கு கனமாக (பாரமாகி) போகும்.

எதற்க்கெடுத்தாலும் நொச்சு நொச்சுனு இருந்தால், கணவன் வீட்டின் நடுவில் இருந்து ஆளுமை செய்யாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என்று அவன் போக்கில் இருந்து விடுவான் (நீதி 25:24).

மனைவி, வீட்டை கட்ட வேண்டும் (நீதி 14:1)

அவள் – தன் வீட்டுக்கு *அலாரமாக இல்லாமல் அலங்காரமாக* இருக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது (நீதி 31:10)

மனைவி, தன் சொந்த புருஷனுக்கு அடங்கி இருக்க வேண்டும் (எபே 5:22).

அப்போது மாத்திரமே – அந்த வீடு சந்தோஷத்திலும் சமாதானத்திலும் திளைத்திருக்கும்.

** கணவனுக்கான  குறுஞ்செய்தி - நாளைக்கு !!

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக