வெள்ளி, 6 மார்ச், 2020

#792 - இந்த வசனத்தின் பிரகாரம் ஆபிரகாம் பரலோகத்திலே இருந்தாரா?

#792 - *இந்த வசனத்தின் பிரகாரம் ஆபிரகாம் பரலோகத்திலே இருந்தாரா?*
 
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். லூக்கா 16:23 இந்த வசனத்தின் பிரகாரம் ஆபிரகாம் பரலோகத்திலே இருந்தாரா??

*பதில்*
பரலோகத்தில் இருந்தார் என்றோ பரதீசில் இருந்தார் என்றோ வசனப்பகுதி நமக்கு தெளிவுபடுத்தவில்லை.

ஆனால் குறிப்பாக ஐஸ்வரியவான் பாதாளத்தில் இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது – லூக். 16:23

இந்த பகுதியை வசனத்தின் மூலம் நாம் அறிய வேண்டும் என்றால்: இயேசு கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்புக்கு பின்னரே நிரந்திர இடமாகிய பரலோகம் மற்றும் நரகத்திற்கு அவரவர் கிரியைகளின் படி அனுப்பப்படுவார்கள் என்பதால் (மத். 25:31-46; ரோ. 2:16; 1 கொரி. 5:13; 2 தெச. 1:7-10; 2 தீமோ. 4:8; யூதா 1:9, 14-15) ஆபிரகாமின் மடி என்பது பரதீசாக இருப்பதற்கு எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளது.

இயேசு கிறிஸ்துவின் தற்காலிக இடம் பரதீசாக இருந்தது – லூக்கா 23:43

பவுல் குறிப்பிடும் மனுஷனின் நியாயதீர்ப்புக்கு முன்னர் – சென்ற எல்கை பரதீசு – 2கொரி. 12:3

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக