#723 - *தானியேல் 3:25ல் சொல்லப்படும் தேவ புத்திரன் என்ற 4வது நபர் யாரை
குறிக்கிறது?*
*பதில்*
நான்காவது நபரை, தேவ குமாரனைப் போல
தோற்றமளிக்கிறார்
அழைப்பவர் நேபுகாத்நேச்சார் மன்னர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தானியேல்
3:28ல் நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ
என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்;
அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின்
கட்டளையைத் தள்ளி, தங்கள்
சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால்,
அவர் *தமது
தூதனை அனுப்பி*, தம்முடைய
தாசரை விடுவித்தார்
என்று சொல்வதை
காணும் போது அந்த
4வது நபர் யார் என்பது இன்னும்
துல்லியமான அறிகுறியாகும்.
தேவதூதர்கள் தேவ குமாரர்கள் /
புத்திரர் என்று அழைக்கப்படுகிறார்கள் - யோபு 1: 6.
எனவே இந்த
4வது நபர் தேவதூதராக
இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக