செவ்வாய், 29 அக்டோபர், 2019

#590 - தன் குமாரன் ஈசாக்குக்கு ஏன் தனது தேசத்திலிருந்து, இனத்திலிருந்து பெண் கொள்ள முடிவெடுக்க வேண்டும்??

#590 - *உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு வெளியே வா, என்ற அழைப்பு பெற்று வெளியேறிய ஆபிரகாம், பிற்காலத்தில் தன் குமாரன் ஈசாக்குக்கு ஏன் தனது தேசத்திலிருந்து, இனத்திலிருந்து பெண் கொள்ள முடிவெடுக்க வேண்டும்??*

After all இந்த பெத்துவேல், லாபான் போன்றோர், அந்நிய தேவர்களை பின்பற்றியோர் தானே??  பின்னே கானானியர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தான் வேறுபாடு??

*பதில்*
மனைவி சாராள் காலமானதினாலே (ஆதி. 23:1,19) மகனின் எதிர்காலத்தை குறித்த யோசனை வர ஆரம்பிக்கிறது. ஈசாக்கு யாரை மணப்பார் என்று ஆபிரகாம் கவலைப்பட்டார். (ஆதி. 24:1-4)

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆபிரகாம் இப்போது சுமார் 140 வயதை எட்டியுள்ளார் (ஆதி. 21:5). ஈசாக்கிற்கு ஏறக்குறைய 40 வயது (ஆதி. 25:20).

ஈசாக்குக்கு ஒரு உள்ளூர் பெண்ணை திருமணம் செய்வதில்லை என்பதில் ஆபிரகாம் உறுதியாக இருந்தார்.

உள்ளூர் மக்களில் கடவுள் நம்பிக்கை இல்லாததால் இது நிகழ்ந்திருக்கலாம், இருப்பினும் இப்பகுதியில் சிலர் மெல்கிசேதேக் போன்ற தேவ பயம் நிறைந்தவரை படித்திருக்கிறோம்.

ஆபிரகாம் தன் சந்ததியினர் கானான் தேசத்தை ஆக்கிரமிப்பார்கள் என்று அறிந்திருந்ததால் (ஆதி. 11:31, 15:7, 24:7) தற்போதைய மக்கள் அழிக்கப்படுவார்கள் என்று அவர் அறிந்திருக்க வேண்டும். மேலும் ஆபிரகாம் தனது இரத்த பந்தத்தை களங்கப்படுத்த விரும்பவில்லை என்பதும் சாத்தியமாகும் - ஆதி. 22: 20-24.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக