#545 - *தாவீது இலக்கம் பார்த்து தேசத்தில் பஞ்சம் ஏற்பட்ட போதுள்ள வருடங்களில் ஏன் முரண்பாடாக எழுதப்பட்டுள்ளது?* இந்த முரண்பாட்டை விளக்கவும்
A)
2
Samuel 24: 9 - யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை
ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க
யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் (8) இருந்தார்கள்; யூதா
மனுஷர் ஐந்து (5) லட்சம் பேர் இருந்தார்கள்.
1Ch
21:5 ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத்
தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம்
உருவத்தக்கவர்கள் பதினொரு (11) லட்சம்பேரும், யூதாவில்
பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் (4,70,000) இருந்தார்கள்.
B)
2சாமு 24:13 - அப்படியே காத் தாவீதினிடத்தில்
வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் (7)
பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் (3)
உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது
உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் (3) கொள்ளைநோய்
உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான்
என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.
1Ch
21:12 மூன்று (3) வருஷத்துப் பஞ்சமோ?
அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன்
சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் (3) சங்காரமோ? அல்லது மூன்றுநாள் (3) கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி
தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில்
ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை
அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும்
என்றான்.
வேறுபாடுகளை விளக்கவும்?
*பதில்*
A)
ராஜாவின்
இந்த கட்டளை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால் – லேவி பென்யமீன் கோத்திரத்தை
அவர் எண்ணிக்கையில் சேர்க்கவில்லை –
1நாளா 21:6
B)
மூன்று
விதமான கோணங்களில் இதற்கான விவரம் நாம் அறியவேண்டியுள்ளது.
எபிரேய மொழியில் ஒற்றை எழுத்துக்கள் – எண்களுக்குப் (One digit Numbers) பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் பல எபிரேய எழுத்துக்கள் மிகவும் ஒத்ததாக (resemblance) இருப்பதால் பல வருடங்கள் கழித்து கிடைக்கப்பெற்ற
சுருளின அடிப்படையில் எடுக்கும் தகவல்களை மொழிபெயர்ப்பாளர்கள் உருவழிந்தும் நசிந்தும்
இருக்கும் எண்களை பார்க்கும் போது தவறு நிகழ்வது
வழக்கத்திற்கு மாறானதல்ல.
எபிரேயத்தில்
:
மூன்றிற்கான எண் வடிவம் -> ג
ஏழுக்கான எண்
வடிவம் ז
ஏறத்தாழ
உருவத்தில் மிக நெருக்கமாக ஒன்று போல இருக்கும் இந்த வடிவம் தவறாகப்
படிக்கப்படுவதையும், பிடிபடாமல்
இருப்பதும்
ஒருபக்கம் வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.
கி.மு
100 ஆண்டுகளுக்கும் முன்னர் உள்ள பழைய ஏற்பாட்டின் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்புபடி 2சாமுவேல் 24:13-ல் 3 வருடம் என்று இடம்
பெற்றிருப்பது ஒரு இணையானவாதம்.
மேலும்
சில வேத வல்லுனர்கள் குறிப்பிடுகிற கோணம் – தேவன், தாவீதுக்கு கொடுத்த
3வகை தண்டனையை தாவீதே தேர்வு செய்து கொள்ளும்படி சொல்வது என்னவென்றால் :
1-மூன்று
வருட பஞ்சம்
2-மூன்று
மாதங்களாக எதிரியுடன்
போரிட்டு தோற்றுப்போவது
3-மூன்று
நாட்கள் கடுமையான வாதைகளை சந்திப்பது
இப்படி
மூன்றும் அர்த்தத்தோடு கொடுக்கப்பட்டவை என்கிறார்கள்.
இறுதியாக,
2 சாமுவேல் 24:
13-ல் உள்ள அறிக்கை ஒரு இலக்கிய வடிவத்தில் ஒரு ஒத்திசைவு வெளிப்பாடு என்று
வெளிப்படுத்தப்படலாம்.
ஒரு ஒத்திசைவான வெளிப்பாட்டில், எழுத்தாளர்
அதன் ஒரு காலப்பகுதி
ஏற்கனவே கடந்துவிட்டாலும் முழு காலத்தையும் பேசுகிறார் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது.
உதாரணமாக,
எண் 14: 32-33ல்
தேவன், “உங்கள்
பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள்
பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.” என்று
கூறினார். ஆனால் இந்த அறிக்கையின் போது அலைந்து திரிதல் பல ஆண்டுகளாக ஏற்கனவே நடந்து
வருகிறது.
அதுபோல
கடந்த காலங்களில் சவுலின் பாவங்களால் இஸ்ரேல் ஏற்கனவே மூன்று வருட
பஞ்சத்தை அனுபவித்ததாக 2சாமுவேல்
21:1 ல்
நாம் வாசிக்கிறோம்.
ஒரு வருடம் கழித்து இஸ்ரவேலின் போர்வீரர்களை எண்ணுவதில்
தாவீது பாவம் செய்தார். மூன்று வருட பஞ்சத்திலிருந்து மீள ஒரு வருடம் போதுமான
நேரம் இருக்காது.
2
சாமுவேல் 24:13-ல்
உள்ள அறிக்கை இன்னும் மூன்று வருட பஞ்சம் அல்லது மொத்தம் ஏழு ஆண்டுகள் பஞ்சத்தால்
அவதிப்பட்டது.
முந்தைய மூன்று ஆண்டு பஞ்சம் தாவீது ஏன் அந்த
விருப்பத்தை தவிர்த்தது என்பதை விளக்கும். இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பஞ்சம்
தொடர்ந்தால் இஸ்ரேலில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
கூறப்படும் பிற முரண்பாடுகளைப் போலவே, நியாயமான
விளக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. மாறாக, வித்தியாசம்
மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால் இவை ஒரே நிகழ்வுகளின் இரண்டு வெவ்வேறு பதிவுகள்.
இரண்டு கணக்குகளின் நோக்கமும் அவற்றின் கண்ணோட்டங்களும் வேறுபட்டவை.
2
சாமுவேல் நிகழ்வுகளைக் கண்ட தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது.
1நாளாகமம்
என்பது கடந்த காலத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக
நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கும் ஒரு வரலாற்றுக் கணக்கு.
இது ஒரு நீதிமன்ற வழக்கில் என்ன நடக்கிறது என்பது போன்றது.
இரண்டு சாட்சிகள் ஒரே நிகழ்வுகளை சிறிய வேறுபாடுகளுடன் விவரிக்க முடியும் மற்றும்
இருவரும் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவை இரண்டு வெவ்வேறு இடங்களில் நின்று
கொண்டிருந்தன, ஒவ்வொன்றும்
வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன. இந்த வழியில்
பார்த்தால், 2 சாமுவேல் ஏழு ஆண்டுகளைக் குறிப்பிட்டார் என்பது விந்தையாக இருக்காது.
தாவீது
ஏன் அந்தத் தேர்வைத் தவிர்த்தார் என்பது நமக்கு விடையை கணிக்க உதவுகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக