செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

#369 *கேள்வி* நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். மத்தேயு 24:20


#369
*கேள்வி*
நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். மத்தேயு 24:20

அய்யா, மேற்கண்ட வசனத்திற்கான விளக்கமளிக்கவும்

*பதில்* :
23-24ம் அதிகாரத்தை சேர்த்து படித்தால் எருசலேமின் அழிவும் உலக அழிவுமான -  2 விதமான அழிவுகளை கிறிஸ்து குறிப்பிடுவதை அறியலாம்.

20வது வசனம் எருசலேமின் அழிவு நாட்களை குறிக்கிறது (மத் 24:2)

அந்த அழிவு நாளில் இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் சுலபமாய் தப்பிப்போகும்படி அப்படிபட்ட அழிவு வேளை மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

மாரிகாலம் – தப்பிபோவதற்கு சிரமம்.
ஓய்வு நாள் – எந்த வேலையும் பார்க்ககூடாது. தொலைதூரம் நடக்க / ஓட கூடாது  - தப்பி போவதற்கு சிரமம்.  (யாத் 16:29)

சுமார் 70ம் ஆண்டு நம் ஆண்டவரால் சொல்லப்பட்ட இந்த காரியம் நிறைவேறியது. ஒரு செங்கல் ஒன்றன் மீது ஒன்று இல்லாத அளவிற்கு எருசலேம் முழுவதுமாய் அழிக்கப்பட்டது வரலாறு.

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் Whatsapp (Locked) குழுவில் இணைய அழைக்கிறோம்.


** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions


*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக