செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

#369 - நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். மத்தேயு 24:20

#369 - *நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்*. மத்தேயு 24:20

அய்யா, மேற்கண்ட வசனத்திற்கான விளக்கமளிக்கவும்

*பதில்* :
23-24ம் அதிகாரத்தை சேர்த்து படித்தால் எருசலேமின் அழிவும் உலக அழிவுமான -  2 விதமான அழிவுகளை கிறிஸ்து குறிப்பிடுவதை அறியலாம்.

20வது வசனம் எருசலேமின் அழிவு நாட்களை குறிக்கிறது (மத். 24:2)

அந்த அழிவு நாளில் இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் சுலபமாய் தப்பிப்போகும்படி அப்படிபட்ட அழிவு வேளை மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

மாரிகாலம் – தப்பிபோவதற்கு சிரமம்.
ஓய்வு நாள் – எந்த வேலையும் பார்க்ககூடாது. தொலைதூரம் நடக்க / ஓட கூடாது  - தப்பி போவதற்கு சிரமம்.  (யாத். 16:29)

சுமார் 70ம் ஆண்டு நம் ஆண்டவரால் சொல்லப்பட்ட இந்த காரியம் நிறைவேறியது. ஒரு செங்கல் ஒன்றன் மீது ஒன்று இல்லாத அளவிற்கு எருசலேம் முழுவதுமாய் அழிக்கப்பட்டது வரலாறு.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக