செவ்வாய், 7 மே, 2019

#142 - எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து சொல்வது தீர்க்கதரிசனமா அல்லது சொன்ன வார்த்தை நிறைவேற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து நடப்பிப்பது தீர்க்கதரிசனமா?

#142 - *எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து சொல்வது தீர்க்கதரிசனமா அல்லது சொன்ன வார்த்தை நிறைவேற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து நடப்பிப்பது தீர்க்கதரிசனமா?*

*பதில்:*
தீர்க்கதரிசனம் என்பது தேவனுடைய திட்டத்தை ஜனங்களுக்கு வெளிபடுத்துவது.

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள் (2 பேதுரு 1:21)

ஜனங்களுடைய பாவத்தை கண்டிக்கும் பொருட்டோ அல்லது இராஜ்ஜியத்தை முன்னிட்டு பிதாவானவர் கிறிஸ்துவின் மூலம் வைக்கப்பட்டிருக்கும் வருங்காரியத்தை குறித்தவை (ஏசா. 7; எரே. 31-34; ஏசா. 2, 53…)

மேலும் தீர்க்கதரிசனம் என்பது நடைமுறை காரியத்தை குறித்தும் பின்பற்றிக்கொண்டிருக்கும் பாவத்தை கண்டிக்கும் வகையிலும் வந்திருக்கிறது. (ஏசா. 1-3; எரே. 2;…)

தீர்க்கதரிசனங்கள் சொல்வது முடிந்து போகும் என்று பவுல் கூறியிருக்கிறார் (1கொரி. 13:8-11)

....தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, வேத வாக்கியங்கள் எல்லாம் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2தீமோ. 3:16-17)

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோ. 20:31.

எந்த மனுஷனும் பரலோகம் போவதற்கு தேவையான எல்லாவற்றையும் தேவன் நமக்கு தந்தது மாத்திரமல்ல – சொல்ல வேண்டியவை எல்லாவற்றையும் அவர் நமக்கு சொல்லிவிட்டார் என்பதால் – எழுதப்பட்டவைகளுக்கு மிஞ்சி எண்ணவேண்டாம் (1கொரி. 4:6).

சொல்லப்பட்டவைகளை கூட்டியோ குறைத்தோ நாம் பின்பற்றவும் கூடாது (வெளி. 22:18-19)

சொல்லப்படாதவைகளை தேடியும் ஓட வேண்டாம் – நமக்கு தேவையில்லை என்று தேவனே தொியபடுத்தவில்லை (உபா. 29:29)

நான் போகும் காரியம் நடக்குமா? இந்த கலியாணம் நடக்குமா? இந்த மாப்பிள்ளை ஓகே தானா? இந்த பெண் ஓகே தானா? இந்த பிசினஸ் செய்யலாமா? விசுவாச வளர்ச்சிக்கு தேவையானதை தாண்டி இவ்வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள நினைப்பது – ஜோசியம். அதை சொல்பவனும் கேட்பவனும் சபிக்கப்பட்டவன் என்று வேதாகமம் சொல்கிறது.....(லேவி. 20:6; 27; 19:31; யாத். 22:18; உபா. 18:10-12)

தற்கால மேடை விளம்பரதாரர்கள் – ஜோசியத்தை நாகரீகமாக தீர்க்கதரிசனம் என்று சொல்கிறார்களா என்பதை அவரவர் நிதானிக்க வேண்டும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக