திங்கள், 27 மே, 2019

#178 கேள்வி: மாதப்பிறப்பில் சபை கூடுதலை அனுசரிப்பது சரியா?


#178
கேள்வி:
மாதப்பிறப்பில் சபை  கூடுதலை அனுசரிப்பது சரியா?
வேதம் இதை குறித்து என்ன சொல்லுகிறது..

பதில்:
புதிய ஏற்பாட்டு சட்டத்தின் படி சபை கூடி வருதல் என்பது தொழுகையை குறிக்கிறது (எபி 10:25, 1கொரி 5:4, 11:17, 18, 14:23, 26, பிலே 1:2....)

(வழக்க சொல் = ஆராதனை) 
தொழுகை என்பது வாரத்தின் முதல் நாளில் (ஞாயிறு) கூட வேண்டும் (அப் 20:7)

ஜெபதிற்காக / வேத ஆலோசனைக்காக சபையார் மற்ற நாட்களில் கூடியிருக்கிறார்கள் (அப் 6:4, 12:5. 12:12, 13:3, 14:23, 16:13… ...)  இது தொழுகைக்கான கூடுகை அல்ல !!



தனியாகவோ குழுவாகவோ ஒரு காரியத்திற்காக எந்த நாளிலும் / எந்த நேரத்திலும் ஜெபிக்கலாம்.

வாரத்தின் முதல் நாளில் கூடுவது கட்டாயம். அதை தவற விட கூடாது.

வாரத்தின் முதல் நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மாதப்பிறப்பை - முக்கியபடுத்துவது தவறு. 

நன்றி

எடி ஜோயல்

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஈமெயில் பெற Subscribe பண்ணவும் : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions 


கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 2

கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 1
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக