#92 *கேள்வி - லாசரு இறந்து 4 நாட்கள் ஆன பிறகு உயிரோடு எழுப்பப்பட்டார். அவருக்கு பாதாளத்தின் செயல் ஞாபகம் இருக்குமா?*
மேகம்
பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான். இனி தன் வீட்டுக்குத் திரும்பான்,
அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது. யோபு 7:9,10
உயிரோடிருக்கிறவர்கள்
தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இனி அவர்களுக்கு
ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
பிர 9:5
பாதாளத்திற்கு
சென்ற ஆத்துமா, ஆவி திரும்ப சரீரத்திற்குள் வருவது சாத்தியமா?
எலியா, எலிசா, இயேசு
கிறிஸ்து, பேதுரு போன்றோர் இறந்தவர்களை உயிர் பெற செய்தனரே.
லாசரு
இறந்து 4 நாட்கள் ஆன
பிறகு உயிரோடு எழுப்பப்பட்டார்.
அவருக்கு
பாதாளத்தின் செயல் ஞாபகம் இருக்குமா?
*பதில்:*
பதிலுக்காக
வேதாகமத்தை அலசிய போது மிக அற்புதமான ஒரு வார்த்தையை கவனிக்க தோன்றியது..
யோ. 11:11 - இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி:
நம்முடைய சிநேகிதனாகிய லாசரு *நித்திரையடைந்திருக்கிறான்*,
நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.
மூல பாஷையிலும்
– நித்திரை என்ற அர்த்தத்தில் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது !!
நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்து – ஆதியும் அந்தமும் அறிந்தவர்....
இப்படிப்பட்ட
ஒரு அற்புதம் நிகழவேண்டும் என்பது தேவனுடைய ஆதினத்தில் இல்லாமல் இருந்திருக்காது!
சரீரத்தில்
லாசரு இறந்து போனது தின்னம் – அது 100 சதவீதம் உண்மை. எந்த மாற்றுக்கருத்தும்
இல்லை.
இறந்ததும் ஆவி –
தேவனிடத்தில் போய்விடும் என்கிறது தேவனுடைய வசனம் (பிர. 12:7)
இந்த அற்புதம்
நிகழ வேண்டும் என்பதற்காக இந்த சம்பவத்தில் – இவை நடைபெறாமல் இருந்திருக்கலாம்.
வேறு எந்த அதிகமான யூகத்தையும் நான் வெளிபடுத்தப் பிரியப்படவில்லை.
அதை அறிந்து
தான் நம் இயேசு கிறிஸ்து ஆரம்பத்திலேயே அவன் நித்திரையாய் இருக்கிறான் என்று
சொன்னார் போலும் !!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக