புதன், 20 ஏப்ரல், 2022

விசுவாசத்தின் கிரியை உயர்வை தருகிறது

*விசுவாசத்தின் கிரியை உயர்வை தருகிறது*

by : Eddy Joel Silsbee

 

பூரண சற்குணராயிருக்கிற பிதாவாகிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

 

அவர் தீயோர் மீதும் நல்லோர் மீதும் மழையை வருஷிக்கிறவர். (மத். 5:45)

 

அவர் தீயோர் மீதும் நல்லோர் மீதும் சூரியனை உதிக்கசெய்கிறவர். (மத் 5:45)

                                      

அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறவர் (லூக்கா 6:35)

 

பாவிகளாய் நாம் இருக்கும் போதே, நம்மில் அன்பு வைத்து தனது சொந்த குமாரனை பலியாக்கியவர். (1யோ. 4:9-11)

 

துரோகிகளுக்கும், விரோதிகளுக்கும், பாவிகளுக்கும், பெலனற்றவர்களுக்கும், அநீதியுள்ளவனுக்கும், சத்துருவுக்கும் அவர் இரங்கினவர். ரோ. 5:6-11

 

அவர் எல்லோர் மேலும் தயவுள்ளவர் (சங். 145:9)

 

அவரை போலவே நாமும் பாரபட்சம் இல்லாமலிருக்க வேண்டும் என்பது தேவ குமாரனுடைய கட்டளை (மத். 5:48)

 

கிறிஸ்துவின் அடிச்சுவட்டை பின்பற்றுகிற நாம்;

நமக்குப் பிரியமானவர்களுக்காக மாத்திரமல்ல நம்மை விரோதிக்கிறவர்களையும், நிந்திக்கிறவர்களையும், தூஷிக்கிறவர்களையும், மதிக்காதவர்களையும் மறக்காமல் அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும்.

 

எந்த இடத்தில் நம்மை அவர்கள் தாழ்த்தினார்களோ அதே இடத்திலேயே நம்மை அவர்களுக்கு முன்பாகவே உயர்த்துவார். அப். 1:8, 4:10-13;  16-21

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JDfVxazP3KYEsGbNA0zhBJ

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/cplYTcPNClg

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக