வெள்ளி, 1 ஏப்ரல், 2022

கிறிஸ்துவை கனப்படுத்திய ஸ்திரீகள்

*கிறிஸ்துவை கனப்படுத்திய ஸ்திரீகள்*

by : Eddy Joel Silsbee

 

அபிஷேகிக்கபட்ட கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து ஒரு ஸ்திரீ, கிறிஸ்து போஜனபந்தியிலிருக்கும்போது, அவர் *சிரசின்மேல்* ஊற்றினாள் என்று மத். 26:7ல் இருக்கிறது.

 

ஆனால்,

யோ. 12:3ல் மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் *பாதங்களில் பூசினாள்*, என்று பார்க்கிறோம்.

 

வேதாகமத்தை படிக்கும் போது, முன்னும் பின்னும் படிக்கவேண்டியது அவசியம்...

 

இந்த அவசர உலகத்தில் எவருக்கும் நேரம் இல்லாமல்,

வேகவேகமாக படித்து விட்டு, இதுவும் அதுவும் ஒன்று தான் என்று ஓங்கி பிரசங்கமும் செய்து விடுகிறார்கள்.

 

முதல் சம்பவம் – கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு *2 (இரண்டு) நாளைக்கு முன்னர்* நடந்தது. (மத். 26:2)

 

இரண்டாவது சம்பவம் – கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு *6 (ஆறு) நாளைக்கு முன்னர்* நடந்தது. (யோ. 12:1)

 

தேவனுடைய வார்த்தையை தியானிக்கும்படி, அநுதினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பத்து வசனம் படித்தாலும், ஆழமாக அதை உணர்ந்து அசைபோட்டு ஜீரணிக்கும்படி படித்துத்தேறுவோம்..

 

தினமும் வேத வாசிப்பிற்கென்று நீங்கள் ஒதுக்கும் ந்த நேரத்தின் நிமித்தம் வாழ்க்கையில் தேவன் நிச்சயம் உங்களை கனப்படுத்துவார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/oHXvDPhKABI

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக