புதன், 9 மார்ச், 2022

ஆலயத்தின் அழகு?

*ஆலயத்தின் அழகு?*

by : Eddy Joel Silsbee

 

கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இனிய நாள் வாழ்த்துக்கள்.

 

தேவாலயத்திற்கு போய் திரும்பின சீஷர்கள்;

அங்கு சொல்லப்பட்ட போதனையோ,

பாடின பாடல்களோ,

நடந்த தொழுகை முறைமைகளை மனதில் முதன்மையாக வைக்காமல்;

இந்தக் கல் எவ்வளவு அழகு, அந்தக் கல் எவ்வளவு கலைநயம் என்று *கட்டிடத்தின் அழகை* விமரிசித்துக்கொண்டு இருந்தனர் (மாற்கு 13:1)

 

புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கும் நாம்,

*தேவன் எந்தக் கட்டிடத்திலும் வசிப்பதில்லை* என்று அறியவேண்டும்.

 

*நாம் தான் ஆலயம்*.  கூடும் இடமோ வெறுமனே ஆராதனைக் கூடம் அல்லது ஒரு வளாகம் மாத்திரமே.

 

தேவனுக்கு உகந்த சத்தியத்திற்கேற்ற *கீழ்படிதலினால்* தொழுகையை அலங்கரிப்பதை மறந்து;

கட்டிடத்தின் அழகையும்,

பலவிதக் கருவிகளினாலும்,

ஸ்பீக்கர் பாக்ஸ்களினாலும்,

க்கால *கிறிஸ்தவ மதத்தினர்* அலங்கரித்துவிட்டனர்.

 

உண்மையான ஆலயத்தை விட்டு உயிரற்ற கல்லுகளால் ஆன கட்டிடத்தை வணங்கக்கூடாது.

 

மனிதனால் கட்டின ஆலயத்தை அலங்கரிப்பதை விட்டு தேவனால் கட்டப்பட்ட ஆலயத்தை அலங்கரிப்பதே அவசியம் !!

 

*கிறிஸ்தவ மதத்தை களைந்து மார்க்கத்தை படித்து அறிந்து பின்பற்றினால், கிறிஸ்துவின் வருகையில் நாம் சேர்த்துக் கொள்ளப்பட ஏதுவாகும்*.

 

நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோ. 13:11

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/6XvYDcgGpKs

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக