*ஆலயத்தின் அழகு?*
by : Eddy Joel Silsbee
கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இனிய நாள் வாழ்த்துக்கள்.
தேவாலயத்திற்கு போய் திரும்பின சீஷர்கள்;
அங்கு சொல்லப்பட்ட போதனையோ,
பாடின பாடல்களோ,
நடந்த தொழுகை முறைமைகளை மனதில் முதன்மையாக வைக்காமல்;
இந்தக் கல் எவ்வளவு அழகு, அந்தக் கல் எவ்வளவு கலைநயம் என்று *கட்டிடத்தின் அழகை* விமரிசித்துக்கொண்டு இருந்தனர் (மாற்கு 13:1)
புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கும் நாம்,
*தேவன் எந்தக் கட்டிடத்திலும் வசிப்பதில்லை* என்று அறியவேண்டும்.
*நாம் தான் ஆலயம்*. கூடும் இடமோ வெறுமனே ஆராதனைக் கூடம் அல்லது ஒரு வளாகம் மாத்திரமே.
தேவனுக்கு உகந்த சத்தியத்திற்கேற்ற *கீழ்படிதலினால்* தொழுகையை அலங்கரிப்பதை மறந்து;
கட்டிடத்தின் அழகையும்,
பலவிதக் கருவிகளினாலும்,
ஸ்பீக்கர் பாக்ஸ்களினாலும்,
இக்கால *கிறிஸ்தவ மதத்தினர்* அலங்கரித்துவிட்டனர்.
உண்மையான ஆலயத்தை விட்டு உயிரற்ற கல்லுகளால் ஆன கட்டிடத்தை வணங்கக்கூடாது.
மனிதனால் கட்டின ஆலயத்தை அலங்கரிப்பதை விட்டு தேவனால் கட்டப்பட்ட ஆலயத்தை அலங்கரிப்பதே அவசியம் !!
*கிறிஸ்தவ மதத்தை களைந்து மார்க்கத்தை படித்து அறிந்து பின்பற்றினால், கிறிஸ்துவின் வருகையில் நாம் சேர்த்துக் கொள்ளப்பட ஏதுவாகும்*.
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோ. 13:11
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக