வெள்ளி, 11 மார்ச், 2022

தேவ ஆசீர்வாதம் பெற மனிதனின் செயலும் அவசியம்

*தேவ ஆசீர்வாதம் பெற மனிதனின் செயலும் அவசியம்*

by : Eddy Joel Silsbee

 

எப்போதும் நம்மை காக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தேவனுடைய கிருபை எல்லோர் மீதும், எப்போதும் உண்டு.

 

ஆனால், அவருக்கு கீழ்படிந்தாலேயன்றி அவரின் இரட்சிப்பையும் பாதுகாப்பையும் எவரும் அடைய முடியாது.

 

முதலாவது தேவனுக்கு கீழ்படிதல்.

பின்னர் மற்ற அனைத்தும் தாமாகவே வருகிறது.

 

தானியேலும் அவனது மூன்று நண்பர்களும்;

முதலாவது தேவனுக்கு கீழ்படிந்தார்கள்.

*பின்பு* பிரதானியின் கண்களில் தயவு கிடைக்க தேவன் கிருபைச் செய்தார். தானி. 1:8

 

முதலாவது தன்னைக் கவனித்து தவறுகளிலிருந்து மீள்கிறான்.. அதாவது அவனது மனந்திரும்புதலே முதலாவது செயல்படவேண்டும். அதன்பின்பு பொல்லாங்கன் கையிலிருந்து அவனை தேவன் விடுவிக்கிறார். 1யோ. 5:18

 

மனிதன் முதலாவது தேவனிடத்தில் சேரவேண்டும்… அப்பொழுது தேவன் அவனிடத்தில் சேருவார் என்று யாக். 4:8 நமக்கு அறிவுறுத்துகிறது.

 

தீமையை விட்டு நன்மையை முதலாவது மனிதன் தேடவேண்டும். அப்போது சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருப்பார் என்கிறார் ஆமோஸ் 5:14ல் !!

 

தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டு *நம்பியிருக்கும் போது* அவர் நம்மில் சகல சமாதானத்தையும் அனுமதிக்கிறார். ஏசா. 26:3

 

ஆம்.. நாம் செயலில் இறங்காமல் ஜெபத்தோடு நிறுத்திக்கொண்டால் தேவனும் நம் செயலுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்.

 

விருப்ப ஜெபத்துடன் *தேவ வார்த்தைக்கு முதலாவது கீழ்படிவோம்*. தேவனுடைய கரத்திலிருந்து நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும் நன்மையை தேவன் நமக்கு வாய்க்கச் செய்வார்.

 

சமாதானமும், சந்தோஷமும் நம் வாழ்வில் பெற, கிறிஸ்துவை வெறுமனே அல்லேலூயா, ஸோத்ரம் ஆண்டவரே என்று கதறிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் *அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து* செயல்படுத்துவதே அவசியம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/10-3QtBUShA

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக