ஞாயிறு, 16 ஜனவரி, 2022

தண்ணீர் ஞானஸ்நானம் குறைவானதோ?

*தண்ணீர் ஞானஸ்நானம் குறைவானதோ?*

by : Eddy Joel Silsbee

 

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எபேசியர் 4:4-7ல் சொல்லப்பட்ட ஒரே சரீரமும், ஒரே ஆவியும்; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் என்று மனனமாய் எப்போதும் உச்சரித்தாலும்... இன்னும் பலருக்கு அதில் திருப்தியில்லை.. எபே. 4:4-6

 

தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்த பின்னரும்,

ஸ்பெஷலாக வானத்திலிருந்து நேரடியாக பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பலர் வலியுறுத்துகிறார்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள்.

 

அப்படியென்றால், வேதத்தின்படி அது இரண்டாவது ஞானஸ்நானம் ஆகிவிடாதோ?

 

வேத வசனத்திற்கு முரணாக யோசிக்கிறோம் என்று ஏன் இவர்களின் நினைவில் வருவதில்லை?

 

தங்களின் கோட்பாடுகளின்படி வசனத்தை வளைத்துக்கொள்ளவும் அர்த்தஞ்சொல்லவும் முற்படுவது ஆபத்து.

 

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் அப்போஸ்தலருக்கு வாக்களிக்கப்பட்டது மாத்திரமல்ல, எருசலேமைவிட்டு வெளியே போகாமல் இருந்து அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையாக கொடுக்கப்பட்டது. அப். 1:4, 5

 

அதனைத் தொடர்ந்து நேரடியாக அல்ல, அப்போஸ்தலர் மூலமாகவே மாத்திரமே பரிசுத்த ஆவியானவர் அளிக்கப்பட்டார். அப்.10:44; 8:14-17; 19:6

 

இயேசு கிறிஸ்துவின் கட்டளைபடி;

நாம் பெற்றுக்கொள்வதும்,

நமக்கு கட்டளையாய் கொடுக்கப்பட்டதும் தண்ணீர் ஞானஸ்நானம் என்ற ஒரே ஞானஸ்நானம். மத். 28:19.

 

அது பாவமன்னிப்பிற்கென்று எடுக்கப்படவேண்டும். அப்.2:38, 22:16

 

அவ்வாறு எடுக்காதவர்கள் இனியும் தள்ளிப்போடவேண்டாம். முறையானவர்களிடத்தில் முறையாய் சத்தியத்தையறிந்து பெற்றுக்கொள்ளவும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/_TUk3XgWbwo

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக