*படபடாவென்று பேசினால் வெகுளியா?*
by : Eddy Joel Silsbee
சாந்தத்தின் ஆவியை நமக்கு கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
–பட படாவென்று எல்லாவற்றையும் கொட்டி தீர்க்கிறவர்கள், “நாங்க எங்க மனசுல எதுவுமே வச்சிக்க மாட்டோம்”, எங்கள் இருதயம் சுத்தம் என்றும்;
- ஒன்றுமே பேசாமலிருப்பவர்களை நம்பவேக்கூடாதென்றும் உலகம் சொல்லுகிறது..
இந்த கூற்றுக்கு வேதம் சொல்லுகிற பதில் கீழே ஆச்சரியத்தை தரும்... !!
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். நீதி. 21:23
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். நீதி. 10:19
...வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். பிர. 5:3
மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான்... பிர. 10:14
... யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்... இருக்கக்கடவர்கள்; யாக். 1:19
அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். நீதி. 17:27
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.. யாக். 1:26
இவ்வளவு வசனங்கள் போதும் என்று நினைக்கிறேன்..
ஆகவே, படபடவென்று கொட்டி தீர்க்காமல் அளவாய் அவசியத்திற்கு பேசுவதே – சகலத்திலும் நன்மை என்றறிவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/ND1bcvxaZJU
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக