*ஜெபத்தில் பிரசங்கம் வேண்டாம்*
by : Eddy Joel Silsbee
நமக்காய் பிதாவினிடத்தில் பரிந்துரைக்கும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஜெபம் என்பது, நமக்கு வேண்டியதை தேவனிடம் கேட்பது.
அதாவது மன்றாடுவது. ஆணையிடுவதோ, கட்டளையிடுவதோ அல்ல. நெகே. 1:4, 2நாளா. 6:19
ஜெபத்தை கூடியிருக்கும் ஜனங்களிடத்தில் அல்ல பரலோகத்தில் இருக்கும் பிதாவினிடம் கேட்கிறோம். யோ. 16:23
தேவனிடத்தில் தொடர்பில் இருக்கிறோம் என்பதை மறந்து,
அவரிடம் வைக்கும் விண்ணப்பத்திற்கு பதிலாக, கூடியிருப்பவர்களுக்கு ஜெபத்திலேயே ஆலோசனை வழங்கும் பழக்கம் பலரிடம் தலைதூக்கியுள்ளது.
ஜெபத்தில் மண்டியிட்டு தலைசாய்த்து இருப்பவரிடம்,
- நேரடியாக சொல்ல முடியாததை,
- கண்களை மூடி ஜெபத்திலிருக்கும் மனைவியினிடத்தில் நேரடியாக சொல்லமுடியாததை,
- நடந்து முடிந்த சரித்திர கதைகளை,
ஜெபத்தில் ஆண்டவரே, கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவரே, தேவனே என்று சொல்லி, கூடியிருக்கிறவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய முயற்சிக்க கூடாது...
ஜெபத்தின் பெயரால் கூடியிருப்பவருக்கு தகவல் பரிமாறுவது தவறு.
பரம அப்பாவினிடத்தில் நம் *தேவையை கேட்பது* ஜெபம்.
ஜெபத்தில் கதை அடிப்பதை தவிர்த்து சரியானவற்றை தேவனிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்வோம்.
ஆயக்காரனின் ஒரு வரி ஜெபம் பூரண பதிலை பெற்றது.
ஜெபம் இரத்தின சுருக்கமாய் இருக்கட்டும். (லூக் 20:47)
கதாகலாட்சேபம் அவசியமேயில்லை. மத். 6:7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/5KEb4DflNmY
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக