by : Eddy Joel Silsbee
நாம் எப்போதும் ஆனந்தமாய் இருக்கத்தக்கதாக தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சமாதானத்தின் தேவனை நாம் தொழுது கொள்ளும் போது சமாதான குறைச்சல் ஏன் வருகிறது?
யாக்கோபு 1:14ன்படி, வாழ்க்கையில் சமாதானமின்றி இருப்பது அவரவர் செயல்களே.
அதீத ஆசை,
அதீத எதிர்பார்ப்பு,
தேவ பயமின்மை,
நம்பிக்கையற்ற ஜெபங்கள் போன்ற பல காரணிகளால் நிகழ்கிறது.
உட்கார்ந்த இடத்திலேயே சுகமாய் சாப்பிட்டு வாழ்ந்த வாழ்கையை *கோபத்தினால்* இழந்தார் காயீன். ஆதி. 4:5-8
*வைராக்கியதினாலும், வறட்டு கோபத்தினாலும்*, ராஜாங்கத்தையே இழந்தான் பார்வோன். யாத். 10:11; 10:28
மொர்தெகாய் தன்னை மதிக்கவேண்டும் என்ற வறட்டு கௌவுரவத்தினால் அல்லது வறட்டு எதிர்பார்ப்பினால் *ஆமான் மரித்தே போனான்*. எஸ்தர் 3:5
பல நேரங்களில்,
நமக்கு ஏற்படும் இடற்பாடுகளை பொறுக்க மனமில்லாமல் வெகுண்டு எழுந்து விடுவதால் தற்போது இருக்கும் ஆசீர்வத்தையும் இழக்க நேரிடுகிறது.
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் *பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது*. எபி. 10:36
ஒழுங்காக இருப்பதை மேன்மையாக தக்கவைத்துக்கொள்ளும்போது, இன்னும் அதிகமான ஆசீர்வாதத்தை பெறுவது நிச்சயம். லூக்கா 19:17
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/kUAKXeZ6WPA
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக