*இல்லாததை தேடி உள்ளதை தொலைக்கவேண்டாம்*
by : Eddy Joel Silsbee
சமாதானமாய் வழிநடத்தும் நம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சுகமாய் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் எகிப்திலிருந்து வெளியே வந்த ஜனம்;
இல்லாததை நினைத்து “இந்த வனாந்திரத்தில் சாகவா எங்களைக் கூட்டி வந்தீர்” என்று அவர்கள் புலம்பின பிரகாரமே அவர்கள் தங்கள் வாயின் வார்த்தையை அந்த வனாந்திரத்திலேயே கண்டார்கள் !!
அவ்வாறு புலம்பாத 2 பேர் மாத்திரம் கடைசியில் தங்கள் எல்லையை அடைந்தார்கள்.
முறுமுறுக்கும் போது தேவன் வன்மையாக *நம் மீது கோபப்படுகிறார்*. எண். 11:1
ஜுரம் உள்ளவர்கள் -> அரிபிளவினால் (கேன்சர்) போராடுபவர்களை கவனிக்க வேண்டும்.
தம்பதியர் -> விதவைகள் வேதனையைப் பார்க்க வேண்டும்.
பெற்றோர் -> பிள்ளைக்காக ஏங்கும் தம்பதியினரை பார்க்க வேண்டும்.
பணிபுரிவோர் -> வேலை தேடுபவர்களை கவனிக்க வேண்டும்.
ஏழைகள் -> கடன் பாரத்தோடும், வியாதியோடும், தூக்கமின்றியும் அங்கலாய்ப்பில் புலம்பும் பணக்காரைப் பார்க்க வேண்டும்.
யார் யாருக்கு, தேவன் எதை கொடுத்திருக்கிறாரோ, *அதில் சந்தோஷப்பட்டு தேவனுக்கு நன்றி சொல்லி வாழ கற்றுக்கொள்வோம்*.
கணவனும், மனைவியும், பிள்ளையும், தொழிலாளியும், முதலாளியும், ஊழியனும், பெற்றோரும் நாம் சுவாசத்தோடு இருப்பதே பெரிய பாக்கியம் என்பதை மறவாதிருங்கள்.
நஷ்டமோ, கஷ்டமோ, வேதனையோ, துன்பமோ, பிடித்திருக்கிறதோ, பிடிக்கவில்லையோ எதுவாயினும் ஆண்டவர் கொடுத்தது *நன்மைக்கே* என்றுணர்ந்து ஏற்றுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லி தற்கால இக்கட்டுகளிலிருந்து கடந்து செல்லும் பெலனை தரும்படி ஜெபித்து அதன் பலனைக் காண்போம். சங். 57:1
இல்லையெனில், இல்லாததை தேடி உள்ளதையும் தொலைக்க நேரிடலாம். மத். 13:12
ஜெயத்தை சுவிகரித்துக்கொள்ளும் போது இந்த இக்கட்டுகளினாலேயே அந்த ஆசீர்வாதம் கிடைத்தது என்றுணர்வோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக