செவ்வாய், 26 அக்டோபர், 2021

ஜீவனுள்ளபோதே தேவனுக்குக் கீழ்படிவோம்

*ஜீவனுள்ளபோதே தேவனுக்குக் கீழ்படிவோம்*

By : Eddy Joel Silsbee

 

கிருபையும் இரக்கமும் நிறைந்த தேவன் தாமே நம்மை ஆதரிப்பாராக.

 

கனத்தையும் மகிமையையும் புகழ்ச்சியையும் நாம் தேவனுக்கே செலுத்தக்கடமைப்பட்டுள்ளோம்.

 

கிறிஸ்துவை சாராமல்;

சரீர பெலமோ, கல்வி அறிவோ, அநுபவ அறிவோ, சுய புத்தியோ, உலக அங்கீகாரமோ, நிறுவனம் கொடுக்கும் பரித்தர் பட்டமோ, சுய ஒழுக்கமோ, எதுவும் நம்மை பரலோகத்திற்கு கொண்டு போவதில்லை. தீத்து 3:5, யோபு 15:14, ஏசா. 57:12, ரோ. 9:16, 4:5, 2தீமோ. 1:9

 

நம்மிடத்திலிருக்கும் சுவாசமும், ஜீவனும் நம்முடையது அல்ல. அப். 17:25

 

அதை பிடித்து வைப்பதும் திரும்ப அழைப்பதும் தேவன் கையில் உள்ளது. யோபு 12:10, 31:14

 

ஜீவனோடு இருக்கும் காலத்தில், தேவ பயத்தோடு சத்தியத்திற்கு உட்பட்டு கீழ்படிந்து வாழ்வதே கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதம். மீகா 6:8, 1பேதுரு 3:8-9

 

நீதிமானின் வாழ்வும் மரணமும் தேவனுக்கு பிரியமானது. சங். 116:15

 

இரட்சிக்கப்பட்டவர்கள் சந்தோஷத்தோடு அதை சுதந்தரித்துக் கொள்கிறார்கள். (1பேதுரு 1:19-24)

 

தேசத்தின் ஷேமத்தை தேவனுக்கென்று ஆதாயப்படுத்தி, சந்தோஷமாய் சமாதானமாய் வாழ்ந்து நன்மையின் கனியை சுதந்தரித்து வாழ கர்த்தரையே பற்றிக்கொண்டிருப்போம்.

 

தேவன் சகலத்தையும் வாய்க்கச் செய்வாராக. ஏசா. 45:19, புல. 3:40-41, யாக். 4:9-10

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/B59iGZDZ7QM

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக