வெள்ளி, 3 செப்டம்பர், 2021

அன்பின் வெளிப்பாடும் ஞானஸ்நானமும்

*அன்பின் வெளிப்பாடும் ஞானஸ்நானமும்*

By : Eddy Joel Silsbee

 

தன் சொந்த குமாரனையே நமக்கு கொடுத்து நம்மை மீட்ட பிதாவின் கிருபை நம்மை ஆழ்வதாக.

 

உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று இயேசு கிறிஸ்து கூறினதோடு நின்று விடாமல் எல்லா உபத்திரங்கள் மத்தியிலும் அனைவர் மீதும் அன்பு செலுத்தினார்.

 

சிலுவையில் தொங்கி கொண்டு இருந்த போதும் அந்த அன்பு மாறவில்லை. லூக்கா 23:34, 43, யோ. 19:26

 

அவருக்கு விரோதமாய் நாம் பேசிக்கொண்டோ, தூஷித்துக்கொண்டோ, கிறிஸ்துவை சார்ந்தோரை துன்புறுத்திக்கொண்டோ இருந்த காலத்திலும் கூட “என்றாவது ஒரு நாள்” இவனும் தன் தவறை உணர்ந்து வருவார் என்று நமக்காக அவர் காத்துகொண்டு இருக்கிறவர். மத். 5:45, நீதி. 15:3, லூக்கா 13:7-8

 

அவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு நம் பாவங்களுக்காகவே சிலுவையில் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு 3ம் நாள் உயிர்த்து பரலோகத்திற்கு போயிருந்தாலும் அன்றே அந்த பாவக்கடனை நம் சார்பாக தீர்த்து விட்டார். 1பேதுரு 2:24, ரோ. 5:8

 

*ஆனால்*, ஒவ்வொருவனும் தன் தன் தவறை உணர்ந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பாவம் மன்னிக்கப்படும்படி ஞானஸ்நானம் பெறாவிடில்  தான் செய்த பாவம் இருக்கும் அவன் தலையிலேயே இருக்கும். ரோ. 5:8, யாக். 1:15, மாற்கு 16:16

 

கிறிஸ்துவின் அன்பு மாறாதது. எபி. 6:18, ரோ. 11:29

 

*அது போலவே - நம்முடைய அன்பும் எல்லாரிடமும் எப்போதும் மாறாததாயிருக்கட்டும்*. 1பேதுரு 1:16, யோ. 13:34, 1யோ. 4:21, 7-11, 1பேதுரு 3:8-9; 1:22, கொலோ. 3:12-13

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Rbefgg3mVwU

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக