திங்கள், 27 செப்டம்பர், 2021

ஒவ்வொரு நாளும் கிருபையே

*ஒவ்வொரு நாளும் கிருபையே*

By : Eddy Joel Silsbee

 

அளவில்லாமல் நம்மை நேசிக்கும் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எப்படி தவம் இருந்தாலும் நம்முடைய ஜீவனையும் சுவாசத்தையும் கையில் பிடித்து வைக்க முடியாது. சங். 104:29

 

எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் அசுத்தமாயிருந்தாலும், எத்தனை காலம் இங்கு வாழவேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ, அத்தனை காலம் தான் நமக்கு இவ்வுலகில் ! யோபு 34:14-15

 

படுக்கையை விட்டு காலையில் கண் விழித்து எழுந்து விடுவதால், ஏதோ ஒன்றை சாதித்ததால் தான் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்கலாகாது. புதிய நாளை காண்பதற்கு தேவனே நம் மீது கிருபையாய் நம் ஆயுளில் ஒரு நாளை கூட்டி வழங்கியிருக்கிறார். சங். 3:5, 4:8, ஏசா. 50:4

 

நம் ஜீவன் ஒரு நிழலை போன்றது (பிர. 6:12)

 

எப்பொழுது யார் எடுக்கப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. 

 

ஆகவே, இருக்கும் காலத்தில் நேர விரயம் செய்யாமல் மற்றவர்களோடு உள்ள விரோதம், கோபம், வைராக்கியம், விசும்பல் எல்லாவற்றையும் தூர களைந்து போட்டு தேவனுடைய உண்மையான, முழுமையான பிள்ளையாய் இருக்க முற்படவேண்டும்.

 

அவரே நம்மை வழிநடத்துவாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

 

https://youtu.be/BUQ5HesFN3s

 

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக