சனி, 18 செப்டம்பர், 2021

முறையான வஸ்திரம் இல்லையெனில் கதவு மாறும்

*முறையான வஸ்திரம் இல்லையெனில் கதவு மாறும்*
By : Eddy Joel Silsbee
 
உன்னதமான தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
 
ராஜாவின் வீட்டிற்குள்ளே எவரும் தங்கள் இஷ்டப்படி நுழைந்துவிட முடியாது.
 
அங்கே செல்வதற்கு அடக்கமும், ஒடுக்கமும், அமைதலும், மரியாதையும், சரியான உடையும், சுத்தமும் கட்டாயம் அவசியம்.
 
இல்லையென்றால் காவலாளிகள் வாசற் கதவினிலேயே வெளியேற்றி விடுவார்கள்.
 
சர்லோக இராஜாவின் வீடாகிய பரலோக வீட்டிற்குள் பிரவேசிக்கும் தகுதி என்னவென்பதை அறிந்து அதன்படி நம்மை தகுதி படுத்திக்கொள்ளாவிடில் எப்படி அங்கு பிரவேசிக்க முடியும்?
 
வஸ்திரம் மாற்றிக் கொள்ளாதவனை ராஜாவே நேரடியாய் பிடித்து தண்டித்தார் !
 
முறையானதை முறையாய் அணியவில்லையென்றால் பரலோக வாயினுள் அனுமதி மறுக்கப்படுவது நிச்சயம் !  (மத் 22:10-13)
 
சுவிசேஷத்தைக் கேட்கவேண்டும்
அதை விசுவாசிக்கவேண்டும்
மனந்திரும்பவேண்டும்
(பாவத்தையல்ல) விசுவாசத்தை அறிக்கையிடவேண்டும்
(முழுகி) ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்
பின்னர் தான் இரட்சிப்பு !
 
மேலே சொன்ன இந்த முறையை மாற்றி *இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம்* என்ற தவறான ஆடையை அணிந்திருப்பவர்கள் சீக்கிரம் முறையான வஸ்திரத்தை சரியான இடத்தில் பெற்றுக்கொள்ளவும் !
 
இல்லையெனில் கதவுகள் மாறிவிடும் !
வலது புற கதவு – நேர்த்தியானவர்களுக்கு.
இடது புற கதவு – பாக்கி அனைவருக்கும்.
 
முடிவு நம் கையில் !!
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
 
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
 
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
 
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
 
*Please Subscribe & Watch* our YouTube Videos 
 
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக