வியாழன், 19 ஆகஸ்ட், 2021

*கடைசிபடியை முதலில் எப்படித்துவங்குவது?*

 


*கடைசிபடியை முதலில் எப்படித்துவங்குவது?*

by : Eddy Joel Silsbee

 

அனுதினமும் நம்மோடு இடைபடும் வார்த்தையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஆவியானவர் வெளிபடுத்தினார்,

ஆவியானவர் பேசினார்,

ஆவியானவர் சொன்னார் என்று சொல்லப்படும் கூற்றுகளை ஆர்வத்தோடும் பக்தியோடும் கேட்கிறோம்.

 

இயேசு கிறிஸ்து *சொன்னவைகளை*,

நாம் *படித்துத்* தேறும்படியாக,

அப்போஸ்தலர்கள் அவைகளை சரியாக, நேர்த்தியாக எழுதிவைக்க *அவர்களுக்கு தேவ ஆவியானவர்* கொடுக்கப்பட்டு,

இயேசு சொன்னவைகளை *அவர்களுக்கு நினைப்பூட்டுவார்* என்று அவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. யோ. 14:26

 

நாம், ஒழுங்காக வேதத்தை வாசித்தும்,

எழுதப்பட்டவைகள் நமக்கு நினைப்பூட்டபட்டாலும்,

நமக்கிருக்கும் துன்பத்தினால்,

சில வேளைகளில் ஜெபிக்கக்கூட முடியாமல் விக்கி நிற்கும் போது, ஆவியானவர் *நமக்காக பிதாவினிடத்தில் வேண்டுதலும்* செய்கிறார். ரோமர் 8:26.

 

ஆனால், “வேதத்தில் எழுதப்பட்டிராததை ஆவியானவர் பேசினார் என்று சபையாரிடம் கண்ணீரோடும் உணர்ச்சிபூர்வமாகவும் சொந்த கற்பனைகளை சொல்லும்போது எவரும் அதற்கேற்ற ஆக்கினையை தங்களுக்கு வருவித்துக்கொள்கிறார்கள். யாக். 3:1

 

தேர்ச்சி பெற விரும்புகிற,

வளரும் ஊழியாக்காரருக்கு,

*பிரசங்கிப்பதில் எப்படி வளரலாம்* என்ற ஆலோசனையை,

தேவனால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலமான, கைதேர்ந்த,  மூத்த ஊழியர் பவுல் கொடுக்கும் ஆலோசனையின் “வளர்ச்சிப் படிகளை வாசித்து பாருங்கள்” ...   1-> ...  2-> ... 3->  1தீமோ. 4:13

 

இந்த வரிசைப்படியே முன்னேற வேண்டும்…

*கடைசி படியை, முதலில் துவங்கி விடகூடாது*

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/EuOg5IpvJ4k

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக