*காக்கை பிடித்தலும் விளம்பர ஜெபமும் வீண்
by : Eddy Joel Silsbee
தேவ குமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
எப்படியாயினும் எவருடைய கால் அல்லது கை (காக்கை) பிடித்து கெஞ்சியாவது தனக்கு நடக்கவேண்டிய காரியத்தை சாதித்து விடலாம் என்று சிலர் நினைப்பதுண்டு.
ஆனால், யாரை தாஜா பண்ணினாலும், *ஆண்டவர் தான் அதை வாய்க்க பண்ணமுடியுமாம்*. எஸ்ரா 7:27-28; நெகே. 1:11;
வீட்டுக்குள் ஜெபித்துக்கொண்டிருந்தபோது,
வெளியே, தனியறையில் மிகவும் பாதுகாப்பாக,
பலஅடுக்கு சிப்பாய்களால் காவல் செய்யப்பட்ட *சிறையே உடைந்தது* அப். 12:5..
செய்யும் ஜெபத்துடன்,
தானதர்மங்களும் சேர்ந்துக் செய்துக்கொண்டபோது *விண்ணப்பம் வானத்துக்கு எட்டினது* அப். 10:4.
கதவைப்பூட்டி,
வீட்டுக்குள்ளையே,
மண்டியிட்டு,
இரகசியமாய்,
ஜெபிக்கும் ஜெபத்தின் மூலம்,
வானத்தின் கதவை நம்மால் தட்ட முடியும் என்பதால்,
*நமக்கு பதில் கொடுக்கக் காத்திருக்கும் தேவனை உத்தமமாய் அணுகுவோம்*. மத். 6:6
அதைவிட்டு, ஊரைக்கூட்டி, விளம்பரம் கொடுத்து, மேடை போட்டு, இப்போது நான் ஜெபிக்கப்போகிறேன் என்று வாட்ஸப்பில் அறிவித்து அல்லேலூயா ஸோத்ரம் என்று கதறினாலும் அந்த விளம்பரத்தின் பலன் தான் மிஞ்சும். அவ்வாறு ஜெபிக்கும் ஜெபம் தேவனிடத்தில் சேருமா என்பது மத். 6:5-6ன்படி பெரியக் கேள்விக்குறியே.
உத்தமமாய் ஜெபிக்கும் ஜெபத்திற்கு பதில் தானாக வரும். நாம் போய் கால்கை பிடிக்கவேண்டாம், நாம் உத்தமமாயிருந்தால் சம்பந்தப்பட்டவர்களையே நம்மை தேடி வர வைப்பார் நம் ஆண்டவர். நீதி. 29:26, சங். 20:9, சங். 62:12
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக