புதன், 11 ஆகஸ்ட், 2021

எழுந்து நின்ற இயேசுவைக் கண்ட ஸ்தேவான்

*எழுந்து நின்ற இயேசுவைக் கண்ட ஸ்தேவான்*

By : Eddy Joel Silsbee

 

சர்வலோகத்தின் தேவனே நம்மை வழிநடத்துவாராக.

 

வல்லமையோடும், ஆதாரதோடும், அதிகாரத்தோடும் ஸ்தேவான் பிரசங்கித்தார்.

 

அவரது பிரசங்கத்தைக் கேட்டு *உணர்வடைவதற்கு பதிலாக மூர்க்கமடைந்தார்கள்*, அதன் விளைவு முடிவில் அவனைக் கல்லெறிந்து கொன்றும் போட்டார்கள் (அப். 7:50-60)

 

இப்பேற்பட்ட துரோகங்களும், எதிர்ப்புகளும், அவமானங்களும், பற்கடிப்பும், முறுமுறுப்பும், தவறான எண்ணங்களும், திரித்துக்கூறும் கதைகளும், ஜோடித்து குற்றப்படுத்தும் சம்பவங்களும் உண்மையான எந்த ஒரு ஊழியக்காரனுக்கும் எதிராக வரும்.

 

ஒரு துளி தவறும் செய்யாத கிறிஸ்துவிற்கே சிலுவை கிடைத்ததென்றால்; பல நாள் தெருவிலும் வெயிலிலும் கிடந்து ஜன்னலும் கதவும் பொம்மைகளும் விக்கிரகங்களும் அலமாரிகளும் செய்யப்படுவதற்கு ஏதுவாக நீங்களும் நானும் காய்ந்து அவர்களுக்கு பதமாயிருக்கிற பக்குவமான மரத்தை விட்டுவைப்பரோ? லூக்கா 23:31

 

சத்தியத்தின்படி உத்தமமாய் நடந்து நெருக்கடி வந்தால் அது இந்த சமுதாயம் நமக்கு கொடுக்கும் கேடயம் !! 2தீமோ. 3:12

 

கல்லெறியுண்டு இரத்தஞ்சொட்டும் வேளையில் வானத்தை நோக்கினபொழுது; உட்காரந்திருந்த இயேசு கிறிஸ்துவே எழுந்து நின்றதை கண்ட ஸ்தேவானுக்கு எவ்வளவு உற்சாகம் இருந்திருக்கும் !! அப். 7:56

 

உற்சாகத்தோடு ஊழியத்தை கொண்டு செல்வோம். அதற்கான பலனைத் தேவன் நம் கணக்கில் நிச்சயம் எழுதுவார் !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*                                         

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/i1gjek8V4xM

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக