*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
கரிசனையின் வடிவாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
விடுதலை கிடைக்கும் வகையை தெரிவித்தாலும் (யோ. 8:36) - எப்போதும், அனைவருக்கும் நன்மை மாத்திரம் செய்த இயேசு கிறிஸ்துவை *பிசாசு பிடித்தவன்* என்று சொன்னார்கள் யூதர்கள். (யோ. 8:48)
வார்த்தையின்படியும், கட்டளையின்படியும், சித்ததின்படியும், தன் பிதாவை மகிமைபடுத்துவதாக இயேசு சொன்னபோதும், அவர் மீது கல்லெறிய தயாரானார்கள்.. (யோ. 8:59)
தன்னை இப்படி நினைக்கிறார்களே, தான் சொல்வதை கேட்கவில்லையே, எதிர்ப்பு இருக்கிறதே என்ற பயமோ, தயக்கமோ, வருத்தமோ இல்லாதபடிக்கு, தன் கடமையை செய்ய *அடுத்த வேளை தானே பிறவிக் குருடனை உற்று நோக்கி*, அவனுக்கு சுகம் அளித்தார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து !! (யோ. 9:1)
சத்தியத்தை பகுத்து பார்க்க மனமில்லாமல், அங்கொன்றும் இங்கொன்றும் வசனங்களை எடுத்து, அதை ஜவ்வு போல இழுத்து தாங்கள் விரும்பும் கொள்கையை நிரூபிக்க முயன்றாலும், காலமும், வசனமும், தீர்க்கதரிசனமும், தேவனுடைய வார்த்தையும், மாறாதவைகளே.
பரவசத்தில் மூழ்கி,
சத்தியத்தை இழந்து விடாமல்;
யார் நிந்தித்தாலும், விரோதித்தாலும், எதிர்த்தாலும்,
நம் கடமையை தேவ வார்த்தையின்படி செய்ய தவறத் வேண்டாம் !!
கிறிஸ்துவின் பாடமே நமக்கு கொடுக்கப்படுகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக